News

Follow Us

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கும்  லால் சலாம்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கிறார் என்றாலும் படம் எப்படி என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மொத்தமே 20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார் என்றாலும் தெறிக்கவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் படத்தை பாராட்டித் தள்ளியுள்ளனர்.

குறிப்பாக, ரஜினி எண்ட்ரி ஆகும் ஆரம்ப காட்சியும் இடைவேளைக் காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் வேற லெவல் என்று ரசிகர்கள் பாராட்டித் தள்ளுகிறார்கள். இப்படி ஒரு படம் ரஜினிகிட்ட இருந்து… அவ்ளோ ஆக்சன் சீக்குவன்ஸ், கொஞ்சம் அசந்தாலும் நம்மள படம் உள்ள இழுத்துட்டுப் போய் ரத்தக்களறி ஆக்கிவிடுற மாதிரி நேர்த்தியான கதைக்களம். மொய்தீன் பாய் சம்பவம் என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

அதேநேரம் முதல் நாள் முதல் காட்சிக்கு வழக்கம்போல் வாசலில் வந்து குவியும் மாஸ் ரசிகர்கள் இல்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன. மேலும் முதல் பாதி ரொம்பவும் ஸ்லோவாக நகர்கிறது, இதுவும் ஒரு சாதாரண ரஜினி படமே… சூப்பர் சக்சஸ் வாய்ப்பே இல்லை என்றும் சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துவருகிறார்கள். ஆனால், யாரும் படம் குப்பை என்று சொல்லவில்லை என்பதால், படம் ஓரளவு தேறும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் போட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது. ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

படத்தை ஓட வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link