பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]
காலாண்டு தேர்வு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

காலாண்டு தேர்வு விடுமுறையில் நடத்தப்பட உள்ள என்.எஸ்.எஸ். முகாம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, செப். […]
நான் உண்மையாகவே ஜெயலலிதாவின் மகள்! யார் இந்த ஜெயலட்சுமி!

மறைந்த ஜெயலலிதா எனது அம்மா என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்று பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறைந்த அ.தி.மு.க.முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தன்னை செல்வி.ஜெயலலிதா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். திரைத்துறையைத் தாண்டி தனி ஒரு பெண்ணாக அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் கண் அசைவில் கட்டிவைத்திருந்த பெருமை என்றென்றுமே ஜெயலலிதாவையே சாரும். […]
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

இந்து அறநிலையத்துறை சார்பில் நேரடி நியமனம் செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட மொத்தம் 15 பேருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பணி ஆணைகளை வழங்கினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கோவில்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட பெண் ஓதுவார்களான தாரணி, சாருமதி, சிவரஞ்சனி, கோமதி, பார்கவி ஆகிய 5 பெண் ஓதுவார்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார். 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்கான பணி நியமன ஆணை […]
ஸ்தம்பித்து போன வள்ளுவர் கோட்டம்! பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம்!

கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 3,290 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவ அவசர தேவைக்காகவும், உடனடி மருத்துவ வசதிக்காகவும் தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரம் செவிலியர்களும், 300 மருத்துவர்களும் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதில் 3ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர செவிலியர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டதோடு 300 தற்காலிக மருத்துவர்களும் […]
நாடும் நமதே! நாற்பதும் நமதே!- மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

திருப்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். திருப்பூரில் காங்கேயம் படியூர் அருகே நேற்று (செப்.24) மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை […]
கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்! ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை மாநகராட்சி மேயர் இன்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, ‘‘1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளே கரைக்கப்பட்ட நிலையில், சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் உள்ளே போகாமல் தடுமாறுகிறது. இதனால் பெரிய சிலைகளை மீண்டும் கடலில் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும் இரவு பகல் பாராமல் பணியாளர்களும், மீனவர்களும், தன்னார்வலர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் தேவைப்படும் […]
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப் போகிறார்?

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (2016&2021) எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் பணியுடன் சேர்த்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 4,800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்ர்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இதனை கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி 2018ம் ஆண்டு சி.பி.ஐ.க்கு […]
முதலமைச்சருடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! முக்கிய பின்னணி!

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு, […]
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]

