News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை கிடையாது! கனிமொழி எம்.பி. தகவல்!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது புத்தகம் ஒன்றை சோனியா காந்தியின் கைகளில் கொடுத்த முதலமைச்சர் சிறந்த வரவேற்பை அளித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை […]

அக்.18ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.   பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.   உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் […]

கொலை வழக்கு! தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி கைது!

  திண்டுக்கல் மாவட்டத்தில் கார் ஓட்டுநரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரை சென்னையில் வைத்து  போலீசார் கைது செய்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்த பணியுடன் சேர்த்து நடராஜன் நடத்தி வரும் நெய் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலையையும் சேர்த்து பார்த்து […]

இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்கள் மீட்பு! 2வது விமானத்தில் பயணம்!

இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் மூலம் 235 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதம் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு […]

மெத்தைக்கு அடியில் ரூ.42 கோடி பணம்! வருமானவரித்துறையினர் அதிர்ச்சி!

    காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர வீட்டு படுக்கை அறை மெத்தையின் கீழ் ரூ.42 கோடியை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களாகவே பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களையும், கணக்கில் வராத ரொக்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.   அந்த வகையில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் ன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டிற்கு நள்ளிரவு […]

வி.ஏ.ஓ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி! டி.டி.வி. தினகரன் கண்டனம்!

வி.ஏ.ஓ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி! டி.டி.வி. தினகரன் கண்டனம்! வி.ஏ.ஓ. மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய […]

டி.பி.ஐ. வளாகத்திற்குள் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்குள் இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் கடந்த வாரத்தில் டி.பி.ஐ. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பல திருமண மண்டபங்களில் கொண்டு சேர்த்தனர். அதைத்தொடர்ந்து தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். […]

சோனியா காந்தியை புத்தகம் கொடுத்த வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் […]

6,200 அடி உயர ஜாகேஷ்வர் கோவில்! பிரதமர் மோடி சாமி தரிசனம்! exclusive photos

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பித்தோராகர், உத்தரகாண்ட் பார்வதி குளத்தில் பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடி கைகுலுக்கி, பெரியர்வகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.   பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பார்வதி குளத்தில் சிவபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜாகேஷ்வர்  தாமில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். 6,200 அடி உயரத்தில் […]

இஸ்ரேலில் இருந்து 14 தமிழர்கள் சென்னை வருகை! அனைவரையும் மீட்போம்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரையும் விரைவில் மீட்போம் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதல் சம்பவத்தால் இஸ்ரேலில் தங்கியுள்ள அயல்நாட்டினர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.   அதன்படி இந்திய நாட்டின் மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்களை பத்திரமாக விமானம் மூலம் மீட்டு தாயகம் […]