News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எங்களை புறக்கணித்தால் சிக்கல் ஏற்படும்! சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை!

தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகிற நவம்பர் மாதத்தில் மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. மேலும் தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சியினரும் தேர்தல்களத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர்ராவ், […]

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்! எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய […]

தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில்  மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற வகையில் மொத்தம் 3.10 கோடி பெண் வாக்காளர்களும், 3 கோடி ஆண் வாக்காளர்களும், […]

4 பேர் கொண்ட பா.ஜ.க. குழு தமிழகம் வருகை! தீவிர ஆலோசனை!

பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகைபுரிய உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் இல்லம் முன்பாக நடப்பட்ட பா.ஜ.க. கொடிக் கம்பம் அகற்றப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் மத்தியிலும் பற்றி எரிகிறது. இதனால் தமிழக அரசு பா.ஜ.க.வை வெறுப்புணர்வுடன் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 8 ஆயிரத்தை கடந்த பலி!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி […]

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட […]

பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]

மருது பாண்டியர்களின் நினைவுநாள்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர்களின் 222வது நினைவுநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் இது குறித்து கூறும்போது, ‘‘சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மருது பாண்டியர்களின் நினைவுநாள் விழா மற்றும் […]

பெட்ரோல் குண்டுவீச்சு: ஆளுநரின் துணை செயலாளர் காவல்துறைக்கு புகார் கடிதம்!

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு ஆளுநரின் துணைச் செயலாளர் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சம்பவம் நடந்த […]

என் தந்தை யார் கால்களிலும் விழுந்து முதலமைச்சர் ஆகவில்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்து அவர் முதலமைச்சர் ஆகவில்லை  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர்கள் அணி செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘தலைமை கூறுவதை செயல்படுத்தி காட்டுபவர்களே உண்மையான செயல்வீரர்கள்; மருது சகோதரர்கள் போல விருதுநகர் மாவட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர் என்று அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி […]