News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆதவ் அர்ஜூனனை வைத்து வி.சி.க. போடும் மாஸ்டர் பிளான்! ஆடிப்போன தி.மு.க.!

தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதில் இருந்து என்று கேட்டால், ஆதவ் அர்ஜூனன் எப்போது வி.சி.க.வில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதில் இருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.   அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக இருந்த நிலையில், சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி வி.சி.க.வும் சில உள்குத்து […]

குலத் தொழிலுக்குப் பிறகு ஈஷாவுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன். அண்ணாமலை இடத்தைப் பிடிக்கிறாரா..?

விஷ்வகர்மா திட்டம் என்பது புதிதாக கைவினைத் தொழில்களைத் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம் என்று குலத்தொழிலுக்கு ஆதரவாக கூட்டம் போட்டு பேசிய வானதி சீனிவாசனுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ஈஷா மையத்துக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கியிருக்கிறார். ஹெச்.ராஜா அமைதியாக இருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை அடுத்து, அண்ணாமலை இடத்துக்குப் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் ஐந்தொழில் செய்பவர்கள் சலவை ,சவரம்,செருப்பு தைக்கும் தொழில் […]

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஜே… மகாராஷ்டிராவில் களம் இறங்கிய ராகுல்காந்தி

கடந்த முறை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை பா.ஜ.க.வின் வசதிக்காக வரும் நவம்பரில் மகாராஷ்டிரா தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் காட்டும் நிலையில், அதை கொண்டாடுவதற்குள் மகாராஷ்டிரா தேர்தலுக்கு ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார். ஏனென்றால், இந்த தேர்தல் வெற்றியே நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. […]

சேதமடைந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 4) கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா 9ம் நாட்கள் தொடர்ந்து நடக்கும். அதாவது வரும் 12ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.   பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் […]

விஜய்யை மீண்டும் சீண்டிய தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்ததில் இருந்தே பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதோடு கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்.   விஜய் முதல்முறையாக நீட் குறித்து அறிக்கைவிட்ட போது, அதையும் தமிழிசை விமர்சனம் செய்தார். ஒரு விஷயத்தை பற்றி சரியாக தெரியாமல் அறிக்கை விடாதீர்கள் என்றும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் விமர்சித்தார். இது த.வெ.க. தொண்டர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.   அதைத்தொடர்ந்து பெரியார்திடலுக்கு சென்ற […]

கூல் லிப் விற்பனை செய்வர்கள் மீது குண்டாஸ்! பரபரப்பு தகவல்கள்!

கூல் லிப், விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரபரப்பு கேள்வியை எழுப்பியுள்ளார்.   பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவருகிறது. இதற்கு முன்னதாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு […]

நம்ம பிள்ளைகளை விஜய் கட்சிக்கு விட்றாதீங்க… சீமான் சீரியஸ் கட்டளை

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் யாருக்குப் பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ, சீமான் கட்சிக்கு பெருவாரியான இழப்பு வரும் என்பதே யதார்த்தமான உண்மை. ஏனென்றால், சீமானுடைய கட்சியில் 18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்கள் அதிகம் இருக்கிறார்கள். விஜய் பந்தக்கால் நடுவதற்கே 5 ஆயிரம் பேர் ஒன்று கூடியிருக்கிறார்கள். இதை கவனித்து, விஜய் முந்திக்கொள்ளக் கூடாது என்று சீமான் இன்று அறிக்கை விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நவம்பர் […]

சொதப்பலான விஜய்யின் பந்தக்கால் விழா. தீவிர ரசிகர்களுக்கும் திடீர் ரசிகர்களுக்கும் பதவிப் போட்டி

அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடு நடைபெறும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு பந்தக்கால் நடுவது வழக்கம் தான். அது, நிகழ்ச்சியை நடத்தும் பகுதியின் பொறுப்பாளரும், மாநாட்டுக் குழுவினரும் சேர்ந்து சிம்பிளாக செய்து முடிப்பார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பந்தக்கால் நடும் விழாவுக்கு பெரும் கூட்டம் கூடினாலும் போதிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் சொதப்பலில் முடிந்திருக்கிறது.   நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.. இதற்கான பந்தக்கால் […]

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணைக்குத் தடை..! கொண்டாட்டத்தில் ஈஷா மையம்

ஈஷா யோகா மையம் போன்ற இடங்களில் ராணுவம், போலீஸார் நுழைவது சரியாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியிருப்பதை அடுத்து ஜக்கி வாசுதேவ் நிம்மதிப் பெருமூச்சு விடுத்துள்ளார். ஒரு சாதாரண விஷயத்திற்கே உச்சநீதிமன்றத்தில் போய் தடை வாங்குகிறார்கள் என்றால் மிகப்பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள், ஈஷா யோக மைய எதிர்ப்பாளர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு கோவை வடவள்ளி […]

பா.ஜ.க. கூட்டணிக்கும் துண்டு போடுகிறாரா திருமாவளவன்..? சர்ச்சையாகும் ராஜாஜி கட் அவுட்

கருணாநிதி நாணயம் வெளியீட்டுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணக்கமாக ஸ்டாலின் இருந்துவருகிறார். அதே பாணியில் ராஜாஜி கட் அவுட் மூலம் பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் போட்டு வைக்கிறாரா திருமாவளவன் என்று எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுத்’ திடலில் மூதறிஞர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மது விலக்குக்கைக் கொள்கையாகக் கொண்டவர் என்பதாலே அவருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால் […]