News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

யாருய்யா இந்த முரசொலி செல்வம்..? எல்லா வி.ஐ.பி.களும் அஞ்சலி செலுத்துறாங்க

முரசொலி செல்வம் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் தி.மு.க.வின் பரம விரோதியான அண்ணாமலை தொடங்கி சீமான் வரையிலும் அஞ்சலி பதிவு போடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே போய்விட்டார். கட்சி தொடங்காத விஜய்யின் மனைவி சங்கீதா நேரடியாகச் செல்கிறார். அரசியல், சினிமா எதிலும் முகம் காட்டாமல் இத்தனை பேரை இழுத்திருக்கும் முரசொலி செல்வம் யார்.? முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மூத்த மகள் செல்வியின் கணவர். இந்த […]

விஜயகாந்துக்குப் பதில் விஜய் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி? யாருக்காக செய்கிறார் திருமாவளவன்..?

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் வைகோ ஆகியோர் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி நடிகர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக களத்தில் நிறுத்தினார்கள். இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளும் இடம் பிடித்தன. மக்கள் நலக்கூட்டணி எங்கேயும் டெபாசிட் வாங்கவில்லை என்றாலும் தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்பட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இதையடுத்து, இந்த கூட்டணிக்குப் பின்புலமாக ஜெயலலிதா இருந்தார் என்றும் விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மூலமே பேரம் […]

த.வெ.க.மாநாடு: காவல்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆலோசனை!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.   ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். மாநாட்டிற்கான பூஜை மேற்கொள்ளப்பட்டு பந்தல் நடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு […]

கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்! பிரச்சினையை கையில் எடுத்த எச்.ராஜா!

கோவில் ரொம்ப புனிதமான இடம். அங்க கேலி, கிண்டல், கூத்துக்கு இடம் கிடையாது என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழகத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.   உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகியான இளையராஜா கோவிலுக்கு வந்த நிலையில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை தன்னுடைய செல்போனில் வீடியோ […]

சாம்சங் நிறுவனத்தின் கையாளாக செயல்படும் தி.மு.க.! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வருகிறது சாம்சங் தொழிற்சாலை. அங்கு பணியாற்றி வரும் பணியாளர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.   இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை […]

மாணவர்கள் மோதல்: சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு!

கல்லூரி மாணவர்கள் மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுந்தர் என்பவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5ம்தேதி) சுந்தர் சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் […]

திருப்பூர் வெடி விபத்து: உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை அமைத்துள்ளது.  இங்கு பாண்டியன் நகர் சத்யா காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கோவில் விசேஷங்களுக்கு தேவையான பட்டாசு நாட்டு வெடிகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) மதியம் திடீரென்று கார்த்திக் வீட்டில் இருந்து வெடிசத்தம் கேட்டது. இதில் அவர் வீடு தரைமட்டமாக சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் […]

விஜய் கட்சியில் சேர்கிறாரா காளியம்மாள்..? நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து விலகல்

சீமான் கட்சியில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் காளியம்மாளுக்கும் சீமானுக்கும் இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வராததால், விஜய் கட்சியில் அவர் இணைய இருப்பதாக பேச்சு அடிகிறது. இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் கலகலத்துப் போயிருக்கிறது. இது குறித்துப் பேசும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ‘’காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசியதை எங்கள் கட்சியினர் யாருமே ரசிக்கவில்லை. அதன்பிறகு சீமானை காளியம்மாள் சந்தித்த பிறகும் அவர்களுக்குள் இணக்கம் வரவில்லை. காளியம்மாளை […]

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.   அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும், அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை என்பதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.   அந்த வகையில் தமிழக அரசு […]

மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த உள்துறை செயலர்!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்சசியை கண்டுகளித்து மயங்கிவிழுந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உரிய விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நடத்தி விமான சாகசத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். காலை 11 மணிக்கு  முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் மயங்கி […]