பிரதமர் மோடி, அண்ணாமலையை வம்புக்கு இழுத்த பிரபல நடிகர்!

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோர் தான் சிறந்த நடிகர்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ‘‘அண்ணாமலையை தான் நேரில் பார்த்ததில்லை என்று சொல்லிய அவர், தமிழகத்தில் […]
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்! சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், சபாநாயகர் அப்பாவுவிடம் பல முறை மனு கொடுத்திருந்தார். அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வதுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கு! தலைமை தேர்தல் அதிகாரி கருத்து!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு புகழாரம் சூட்டியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்ற ரீதியில் பிரதான கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தலை நடத்தி முடிக்கி தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் […]
1 லட்சம் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் வேலை! எங்கு தெரியுமா?

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரை தொடர்ந்து பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற்றும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 7ம்தேதி இஸ்ரேல் நாட்டுக்கும்- ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் மூண்டது. இன்றளவும் கடுமையாக போர் நடந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை […]
பேரியம் பட்டாசுகளுக்கு தடை! உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

பேரியம் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளிவந்த தகவலின்படி டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பேரியம் உப்பு மற்றும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் காற்று மாசுபாடு ஏற்படுத்துவதுடன் பல்வேறு ஆபத்துகளையும் விளைவித்துவிடுகிறது. இதைத்தொடர்ந்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பசுமை பட்டாசுகளை வாங்கவும், வெடிக்கவும் மக்கள் மத்தியில் […]
புதிய கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுங்கள்- எடப்பாடி பழனிசாமி!

புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘‘மின் கட்டணத்தை குறைக்கக் கோரி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஜவுளித்துறையினர் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் கடந்த 5ம் […]
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]
நாகாலாந்து விவகாரம்! ஆர்.எஸ்.பாரதிக்கு எச்சரிக்கை விடுத்த இல.கணேசன்!

நாய்கறி விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே அங்கே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டி அனுப்பி விட்டதாகவும், அப்படியானால் உப்பு போட்டு உண்ணும் தமிழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், […]
எ.வ.வேலு ஐ.டி.ரெய்டு! அந்த 2 சூட்கேசில் என்ன இருக்கிறது?

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். […]

