News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எடப்பாடி பழனிசாமி ஜஸ்ட் எஸ்கேப். சீமான், ராமதாஸ் கூட்டணி சாத்தியமா?

இடைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறுவதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் அ.தி.மு.க.வினர், புத்திசாலித்தனமாக எடப்பாடி பழனிசாமி போட்டி போடாமல் தவிர்த்தார் என்று பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க் புள்ளிகள், ‘’பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலங்களை கேட்டபின்பும், தேசியக் கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலை தலைநகரிலேயே நடந்தபின்பும், பல்வேறு கடத்தல், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கற்ற அவலங்களை பார்த்த பின்பும் , ஒழுங்கில்லாத சாலைகள் ,ஓடாத பேருந்துகள், முற்றிலும் இல்லாத நிர்வாகம் […]

டாக்டர் ராமதாஸ் ஆசையில் மண்ணு. அன்புமணி அமைச்சர் பதவி அம்புட்டுத்தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் நிச்சயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென பா.ஜ.க. பக்கம் சாய்ந்தார். அதாவது, அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலே கூட்டணி அமைந்தது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி எங்கேயும் வெற்றி பெறவே இல்லை. இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வந்ததும், இதை தன்னுடைய பிரஸ்டீஜ் விஷயமாக ராமதாஸ் எடுத்துக்கொண்டார். விக்கிரவாண்டி எங்கள் கோட்டை என்று டாக்டர் ராமதாஸ் […]

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பார்கள். அந்த அளவுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்வார்கள். ஆனாலும், அன்புமணிக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. ‘இது ஈரோடு இடைத் தேர்தல் அல்ல, எங்க ஏரியா… இங்கே உங்களால் ஜெயிக்க முடியாது’ என்று சவால் விட்டார் அன்புமணி. பா.ம.க.வுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் […]

எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்துக்குக் காரணம் பா.ஜ.க…?

அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே ஒரு கண்டிஷன், யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என்பது தான். அதனாலே, அத்தனை பேரும் வலுவான கூட்டணி குறித்து வலியுறுத்தினார்கள். இப்போது பன்னீர்செல்வம் மட்டுமின்றி ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவி, ஒன்றிணைப்பு குறித்து தொடர்ந்து […]

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன், அமலாக்கத் துறைக்கு ஆப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது […]

ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு. திருமாவளவன், சீமானுக்கு கமாண்டோ பாதுகாப்பு..?

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத்தில் முதல் நபராக அங்கே சென்றது மட்டுமின்றி, ‘இப்போது சரண் அடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்று ஆளும் தி.மு.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் திருமாவளவன். கூட்டணிக் கட்சித் தலைவரே பொய்யான நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்த பிறகே தி.மு.க. மீது அனைத்துக் கட்சிகளும் அவதூறு பரப்பின. ஆகவே, இந்த விஷயத்தில் திருமா மீது தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]

டாஸ்மாக் கடைகளை உடனடியாக குறைக்க முடியாது! அமைச்சர் முத்துசாமி அந்தர்பல்டி!

புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் தமிழக போலீசார் 24 மணிநேரமும் காவல் இருக்க முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.   ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்த போது, அண்டை மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து குடித்த 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   அதேபோல் தமிழக மக்கள் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை […]

விக்கிரவாண்டியில் ராமதாஸ் ஆருடம் பலிக்குமா?

இடைத்தேர்தல் என்றாலே வழக்கமான தேர்தலைவிட கொஞ்சம் அதிகமாகவே ஓட்டுப்பதிவு நடைபெறும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 82 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது விக்கிரவாண்டி. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘’தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பா.ம.க. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’’ என்று கூறியிருக்கிறார். இது சாத்தியமா என்று பார்க்கலாம். இந்த தேர்தலில் […]

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்வதற்கு அதிரடி வேட்டை

தமிழக காவல் துறைக்கு சவால் விடும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை நாளைக்குள் கைது செய்யவேண்டும் என்று இலக்கு வைத்து தமிழக காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.   கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை […]

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது… முடிவே இல்லையா மோடிஜி

தமிழகத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவுக்கு வந்து அவர்கள் கடலில் நுழைந்த உடனே இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து […]