News

Follow Us

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருப்பதி மலையேறி 2.30 மணி நேரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.


பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பைட்டர்’ திரைப்படம் வருகிற (2024) ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் நடிகை தீபிகா படுகோட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சமீப காலமாகவே திரைப்பட வெளியீட்டிற்கு முன்பாக திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பைட்டர்  திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று அத்திரைப்படத்தின் நாயகி தீபிகா படுகோன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார்.


அதன்படி நேற்று (டிச.14) திருப்பதி சென்றார். அலிபிரி மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாத யாத்திரையாக நடிகை தீபிகா படுகோன் 2.30 மணி நேரம் நடந்து சென்றார். அப்போது உடன் சென்று கொண்டிருந்த பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பிக்களை எடுத்துக் கொண்டார்.


பின்னர் திருமலையை அடைந்த தீபிகா படுகோன் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் இன்று (டிச.15) காலையில் தீபிகா படுகோன் வி.ஐ.பி. தரிசனத்தின் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது தீபிகாபடுகோனை தேவஸ்தான அதிகாரிகள் கோவிலுக்குள் அழைத்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link