Share via:
0
Shares
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பித்தோராகர், உத்தரகாண்ட் பார்வதி குளத்தில் பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடி கைகுலுக்கி, பெரியர்வகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பார்வதி குளத்தில் சிவபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜாகேஷ்வர் தாமில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். 6,200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர்தாம் 224 கற்கோவில்களை கொண்டுள்ளது. இங்கு சுமார் 4,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டிவைத்து மக்களுடன் உரையாடினார்.
Tagged latest