News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த செப்டம்பர் மாதம் அரசின் மொத்த ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் ரூ.1,62,712 கோடியாக இருந்தது. 2023 செப்டம்பர் வருவாயுடன் கடந்த ஆண்டு இதே மாதமான செப்டம்பர் 2022 வருவாயான ரூ.1.47 லட்சம் கோடியை விட அதிகரித்துள்ளது. அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் கடந்த செப்.மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூலில், மத்திய ஜி.எஸ்.டி. ரூ.29,818 கோடி தவிர, மாநில ஜி.எஸ்.டி.ரூ.37,657 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போல ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை பொறுத்தவரையில் ரூ.83,623 கோடியாக உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.41,145 கோடி உட்பட) கூடுதலாக, அரசாங்கம் செஸ் மூலம் ரூ.11,613 கோடியை பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலித்த ரூ.881 கோடி உட்பட) வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டை விட (செப்.) இந்த ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டிவசூல் அதிகரித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link