Share via:
தமிழகத்தை திராவிடக் கட்சிகள் எந்த அளவுக்கு சுரண்டியுள்ளன என்பதை குறிப்பாக திமுக செய்திருக்கும் பழைய ஊழல்களை எல்லாம் பொதுவெளியில் எடுத்துப் போட்டு அம்பலப்படுத்தி வருகிறார் முதல்வர் விஜய்.
புதிய தலைமுறை வாக்காளர்களுக்கு திமுகவின் பழைய ஊழல் செய்திகள் எல்லாமே ரொம்பவே புதிது. அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே திமுக காலத்தில் கருணாநிதியின் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருந்த தில்லுமுல்லுகளை எல்லாம் சட்டசபையில் வைத்துப் பேசியிருந்தார் முதல்வர் விஜய்.
இதற்கு திமுகவினர் பதில் சொல்லமுடியாமல் சமாளிக்கும் முன்பு, ஸ்டாலின் மிசா கைதி இல்லை. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஸ்டாலின் செய்த சம்பவதற்காகதான் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று தவெகவினர் உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார், ‘’டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின் தான்.. அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை, வேறு ஏதோ காரணத்திற்காக தான் கைது செய்யப்பட்டார்.. ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆதாரத்தை அழித்துள்ளார்கள்’’ என்று அமைச்சர் நிர்மல் குமார் மீண்டும் பேட்டி கொடுத்துள்ளார்.
மிசா போராளி என்று ஸ்டாலினை போற்றி பாராட்டிக்கொண்டிருந்த திமுகவினரே இப்போது சந்தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டார்கள். இத்தனை ஓட்டை, உடைசல்களை வைத்துக்கொண்டுதான் திமுக சீட்டிங் செய்ததா என்று தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள்.
திமுகவின் பொய் பிம்பம் உடைகிறது.
