Share via:
விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக
ஜோசியர் ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரியின் உத்தரவுப்படி அரசு வேலைகள் செய்வதற்கு
முன்பு பஞ்சாங்கம் பார்க்க வேண்டும், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிற உடை அணிய வேண்டும்.
கார்களில் மஞ்சள் கலர் எலுமிச்சம்பழம் நான்கு வைக்க வேண்டும் என்றெல்லாம் நடக்கும்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரேமலதா இந்த நியமனத்துக்கு கடுமையான எதிர்ப்பு
தெரிவித்தார். முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு
சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு
அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக
வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு? என்று சட்டமன்றத்தில் விளாசினார்
அதோடு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. வன்னியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் சட்டசபையில் வைத்து
வெளுத்தெடுத்தார்கள்.
இதையடுத்து ஜோதிடர் ராதன்
பண்டிட் நியமனத்தை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இப்போது இதையும் கிண்டல் செய்கிறார்கள்.
அதாவது தனக்கு பதவி கொடுத்து, திரும்ப வாங்கிவிடுவார்கள் என்பதை ஜோதிடம்
மூலமாக முன்பே கணித்து இருப்பாரா?
ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்தால், எதிர்ப்பு வருமென்று விஜய்க்கு
தெரியாதா? அல்லது அவருக்கு தெரியாமல், ஜோதிடர் நியமிக்கப்பட்டாரா? சட்டமன்றத்துக்கு
உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு கிளம்பியதால், திரும்ப பெறப்பட்டரா? அல்லது இதுவும்
ஒருவகையான திருஷ்டி கழிப்பா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
எத்தனையோ பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரேமலதாவின்
நெத்தியடியே விஜய்யை மிரட்டியிருக்கிறது. சபாஷ்.
