News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

செப்டம்பர் மாதம் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

 

இதன் காரணமாக மராட்டியம், மத்தியபிரதேசம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன.

 

இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி ஆகஸ்டு 14ம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் 21ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலசனை 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3ம் தேதி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link