Share via:
0
Shares
கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைநீர் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளதால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள எழுமலை நாயக்கர் நகர், சுந்தரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மழைநீர் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுபோல் காட்சியளிக்கிறது. மழைநீரை கடந்து வெளியே வர முடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Tagged latest