Share via:
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் டி.38 ஓட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் இதுவரை 21 தங்கப்பதக்கங்களையும், 26 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களை வென்று இமாலய சாதனை படைத்து வருகின்றனர். மேலும் இந்திய தற்போது பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

