News

Follow Us

தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் இன்று மீண்டும் காசா மீது கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோனது. ஐ.நா. அமைப்பின் தீர்மானத்தையும், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்த இஸ்ரேல், காசா மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. வெளியிட்டது. மேலும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாகவும் வெளியான தகவல் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காசா பொது மக்கள் உணவு, குடிநீர், மருந்து, மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பிடியில் 240 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பணயக்கைதிகளாக இருந்த நிலையில்  இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த 4  நாட்களாக போர் நிறுத்தம் நிலவி வந்தது.

இந்த 4 நாட்களில் ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஹமாஸ் அமைப்பினர் செய்து முடித்ததால் மேலும் இந்த போர்த்தடை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. தற்போது போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் மீண்டும் காசா முனையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் இருக்கும் ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் காசா மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கியுள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link