News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மாஜி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.

பொய் வழக்கு பதிவு செய்து சிலைக்  கடத்தல் பிரிவு முன்னான் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

அது என்ன வழக்கு..?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலப்பட்டியில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவர் விவசாய நிலத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை மீட்ட போலீஸார் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இணைந்து சிலைகளை விற்றது தெரியவந்தது.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-ஆக இருந்த பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், திருவள்ளூரில் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, கோயம்பேடு காவல்நிலையத்தின் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காதர்  பாஷா கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர்  ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம், சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், என் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்தார். இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்”  எனக் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சி.பி.ஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றத்தில்  தடை கோரியிருந்தார். ஆனால், நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ . வழக்குப் பதிவு செய்தது.  

காதர் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் விவகாரத்தில்  பழவலூரில் 13 கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியிருப்பதாக தெரிவித்தது. இதன் அடிப்படையிலே இந்த விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்டமாக சம்மனும் அடுத்து கைது நடவடிக்கையும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link