News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மத்திய  அரசின்  கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா  நிறுவனத்தை டாடா  வாங்கியது . அதன்பின்னர்  டாடாவின்  கைவசம்  இருந்த விஸ்தாரா  விமான  நிறுவனம்  ஏர்  இந்தியாவுடன்  இணைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா – விஸ்தாரா  இணைப்பு  முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கின .

விஸ்தாரா  பெயரிலான  கடைசி  விமானம்  ஒடிசா  மாநிலம் புவனேஸ்வரில்  இருந்து  நேற்று  (நவம்பர் 11)இரவு  டெல்லிக்கு  தனது  கடைசி பயணத்தை  மேற்கொண்டது . 

அதை தொடர்ந்து ஏர் இந்தியாவுடன்  விஸ்தாரா  விமான  நிறுவனம் இணைந்த  பின்  முதல்  விமானம்  (AI2286)  தோஹாவில்  இருந்து நேற்று (11/11/2024) இரவில் புறப்பட்டு இன்று (12/11/2024) அதிகாலையில் மும்பை வந்து  சேர்ந்தது .

இரண்டு நிறுவனங்களும் சேர்ந்த பிறகு இதுவே முதல் சர்வதேச  விமான சேவை ஆகும் .இதை தொடர்ந்து  இரவு 1.30 மணி அளவில் மும்பையில் இருந்து டெல்லிக்கு  AI2985  என்ற விமானம் புறப்பட்டது .

அதை தொடர்ந்து  விமானங்கள் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விமான  எண்கள்  மாற்றம்  குறித்து , முன்பதிவு செய்து  இருந்த  பயணிகளுக்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link