News

ஸ்டாலினுக்கு 5 வியூக வகுப்பாளர்கள்..? குழப்பத்தில் அமைச்சர்கள்.

Follow Us

பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு 100 ரூபாய் பரிசு என்று ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சிக்குள் நிலவும் மோசமான உட்கட்சி மோதலை அம்பலப்படுத்தியிருக்கிறது. இனிமேல், பா.ம.க. ஒற்றுமைக்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணி மீது குற்றம் சுமத்தி வருகிறார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’எனக்கும் செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை எல்லோருக்கும் தெரியும், இரண்டு பேரின் சமரச பேச்சுவார்த்தைக்கு தைலாபுரம் வந்தார்கள் நான் அங்கே சென்றேன். சமரச பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.

நான் தொடங்கிய அமைப்பில் இருந்து 14 பஞ்சாயத்துகாரர்கள் பஞ்சாயத்து பேச வந்தனர். வந்தவர்கள் ஒரே விதமான தீர்ப்பினை கூறியதாகவும், பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தைலாபுரத்தில் இருந்து கட்சியை ராமதாஸ் வளர்க்க வேண்டும், சென்னையிலிருந்து அன்புமணி ராமதாஸ் கட்சியை வளர்க்க வேண்டும் எனவும் பேசினார்கள்.

குலதெய்வம் என பாட்டாளி மக்கள் சொந்தங்கள் தன்னை தெரிவிப்பவர்களை வழிகாட்டியாக நேசிப்பதாகவும் 44 ஆண்டுகள் உழைப்பால் உருவாக்கி கட்டிகாத்த கட்சியை ஓரிரு ஆண்டுகளில் கட்சியை தனக்கே தலைமை ஏற்க உரிமையில்லையா என கேட்பதே தனக்கு அவமானமாக உள்ளதாக கூறினார்.

ஒவ்வொரு செங்கல்லாக கட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாளிகையில் தான் குடியமர்த்தியவரே தன்னை கழுத்தினை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு செயல்பாடுகள் இருந்ததாகவும் அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும், ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தொலைபேசியில் அழைத்து தடுத்தவர் தான் அன்புமணி தீர்வு காண்பதற்கு தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, தந்தைக்கு பிறகே தனயன் ராமதாசுக்கு இதுவரை அன்புமணி ராமதாஸ் என்றும் குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம் தந்தைக்கு மிஞ்சிய தனயன் இருக்க கூடாது இதுவே நியதி 

தங்களுக்கு எல்லாமே அய்யா தான் என கூறி கொண்டு அதால பாதாளத்துல தள்ள பார்ப்பதாகவும், அய்யாவின் லட்சியம் தான் லட்சியம் என கூறிவிட்டு தன்னையே தாக்குகிறார்கள். உயிருள்ள தன்னை உதாசினம் செய்து உருவ படத்தினை வைத்து கொண்டு உற்சவம் செய்கிறார். நடைபிணமாக தன்னை ஆக்கி நடைபயணம் மேற்கொள்வேன் என்பது நாடகம்.  

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் சென்னை திரும்பும் போது அன்புமணி பாமக கட்சியை பார்த்து கொள்கிறேன் என தன்னிடம் கூறினார். அப்போது இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன், செளமியா தன்னிடம் வந்து மாமா என்றார். நான் ஏமா என்றேன், தலைவரை மாற்றிவிடலாம், செளமியா தன்னிடம் கூறியதாகவும் அரசியலில் தன் குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என கூறினேன். ஆனால் அதன் பின்பு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.

முயலுக்கு நான்கு கால் என்றால் அன்புமணி மூன்று கால் என்று தான் கூறுவார். பாமகவை சரியாக வழிநடத்தவில்லை என்பதாலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதாலும் உழைப்பதற்கு தயாராக அன்புமணி இல்லை என்பதால் தலைவர் பதவி பறிக்கபட்டது. நீயா நானா என பார்த்துவிடலாம்.. ’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ராமதாஸை பார்க்க வந்த வடிவேல் ராவணனுக்கு இன்னோவா கார் வாங்கிக்கொடுத்து தன் பக்கம் அன்புமணி இழுத்துக்கொண்டதாகப் பேசப்படுகிறது. அதனாலே, வடிவேல் ராவணனை கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசு என்று அறிவித்து கலகலப்பூட்டினார் ராமதாஸ்.

பணம், பதவி, அதிகாரம் ஆகியவை எந்த அளவுக்கு கொடூரமானது என்பதற்கு அன்புமணியே உதாரணமாக மாறியிருக்கிறார். இனி, பா.ம.க. உடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியாகியுள்ளது. அன்புமணி பக்கம் நிர்வாகிகள் இருப்பது உறுதியானால் புதிய கட்சி தொடங்கவும் ராமதாஸ் தயாராக இருக்கிறாராம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link