News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டெல்லியில் அமித்ஷா கூட்டிய அரசியல் கூட்டத்தில் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதன் அடிப்படையிலே டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்ததாகத் தெரிகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பதற்காக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்திவருகிறார். சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுடன் இணைவதற்கு போராட்டம் நடத்திவருகிறார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்றது. அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு சீட் பேரம் நடத்தாமல் 2 சீட்டை மட்டுமே பெற்றார் டி.டி.வி.தினகரன். அதன் பின் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார்.

டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி குறித்து எடப்பாடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘எங்கள் கூட்டணியில் அமமுக இல்லை’ என்று கூறினார். இதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன், ‘எடப்பாடி அறியாமையில் பேசுகிறார்’ என்று கூறினார். அதே நேரத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ‘டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளார்’ என்று கூறி வந்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடிக்கு மட்டும் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்த ஜான்பாண்டியனின் பொன்விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் அழைக்கப்படவில்லை. தொடர்ந்து மூப்பனார் நினைவு நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில் டிடிவி தினகரனுக்கு அழைப்பு இல்லை. கூட்டணியில் இல்லாத தேமுதிகவுக்கு கூட அழைப்பு இருந்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும், ேநரிடையாகவும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதோடு, ‘நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. இந்த தேர்தலில் கூட்டணி குறித்து அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் வெளிப்படையாக அறிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தலைமைப் பதவியில் இருந்த வரையிலும் இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. அண்ணாமலைக்கு மரியாதை இல்லை என்றதும் ஒவ்வொரு நபராக வெளியேறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை டெல்லி மேலிடமும் எடப்பாடி பழனிசாமியும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link