Share via:
0
Shares
தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் மாதம் 1ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிராமசபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலகநீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களில் நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டம் மிகவும் வாய்ந்தததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் வருகிற நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம் என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அன்றைய தினத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Tagged latest