News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

 

தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு.

 

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் கர்நாடகா மற்றும் கோவா கடற்கரை பகுதிகளில் நீடித்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

 

இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை முதல் (அக்டோபர் 12) ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து வருகிற 16ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில் கனமழையை எதிர்கொள்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை  காலம் மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், பொது மக்கள் பணிக்கு செல்லவும் சிரமப்பட நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link