நேரில் வந்து தீபம் ஏற்றுவாரா நீதிபதி…? நாடாளுமன்றத்தில் திமுக போர்க்கொடி

நீதிமன்றங்களில் திமுக எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், பணிந்துபோக அரசு தயாராக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவதற்கு திமுக முழு அளவில் தயாராகி இருக்கிறது. ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. ஆக, இரண்டு கும்பலும் எதிர்ப்புக் குரல் கொடுப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தற்போது […]
டாலர் மதிப்பு ஜிவ்வுன்னு ஏறுது… மோடிக்கு எதிராக காங்கிரஸ் கப்சிப்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதாவது 2014ம் ஆண்டு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்த நிலையில், ‘இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்தவர் இன்றைய பிரதமர் மோடி. அவரது காலத்தில் இப்போது ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக […]
ஐயப்பனுக்கு ஒரு நீதி… முருகனுக்கு ஒரு நீதியா..? திருப்பரங்குன்றத்தில் மதத் தீ

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எப்போதும் போல் ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும் என்று துடித்த இந்து முன்னணியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக்கு அஞ்சாமல் 144 தடையுத்தரவு போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த திமுக அரசுக்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைக்கும் நிலையில், பாஜகவினர் ஆட்சியைக் கலைக்க குரல் கொடுத்துவருகிறார்கள். இது குறித்து […]
டெல்லியில் ஓபிஎஸ் தர்மயுத்தம்..? எடப்பாடியை மிரட்டுவாரா அமித்ஷா..?

டிசம்பர் 15க்குள் ஒரு முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்குவோம் என்று அறிவிப்பு செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து தெளிவு பெறுவதற்கு டெல்லிக்குப் போயிருக்கிறார். ஆனால், அவரை சந்திப்பதற்கு அமித்ஷா தயாராக இல்லை என்பதால் தர்மயுத்தம் செய்வதாக சொல்லப்படுகிறது. பன்னீரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி சொல்லிவிட்டதால் பாஜகவுடன் மீண்டும் இணைவாரா, தனிக்கட்சி அறிவிப்பாரா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் ஒரு தெளிவான முடிவு பெறுவதற்காகவே துக்ளக் குருமூர்த்தியுடன் இணைந்து டெல்லிக்குச் சென்றுள்ளார் பன்னீர். அமித் ஷா […]
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்… திக்திக் திகிலில் மதுரை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், கலவர அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர், ‘’திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற மிகப்பெரும் அறப்போராட்டத்தை முன்னெடுத்த ராஜகோபாலன், பிப்ரவரி 4 திருப்பரங்குன்றம் மலை காக்க மதுரை பழங்காநத்தத்தில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்களின் அறப்போராட்டம், ஜூன் 22 மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் சங்கமித்த லட்சோப லட்சம் முருக […]
பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ரெடி…? அண்ணாமலை, சரத், நயினாருக்கு எந்த தொகுதி..?

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இன்னமும் முடிவு செய்யாத நிலையில் பாஜகவினர் பட்டியலே தயார் செய்திருப்பது அரசியல் கலவரமாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் 40 இடங்கள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதன்படி இப்போதே 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு […]
கவர்னர் மாளிகைக்கு பேரை மாத்தியாச்சு… இதுதான் அரசியல் கோமாளித்தனம்

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்’ பெயர் “மக்கள் பவன்” என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அரசியல் விளையாட்டு மட்டுமே என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் […]
செங்கோட்டையனை பொளந்து கட்டிய எடப்பாடி. கோபியில் ஸ்டாலினுக்கு சவால்

செங்கோட்டையனுக்கு கோவை விமானநிலையத்தில் கிடைத்த வரவேற்புக்கு பதிலடி கொடுப்பது போன்று கோபி சட்டமன்றத் தொகுதியில் பிரமாண்டமான கூட்டத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை அம்பலப்படுத்தியதும், ஸ்டாலினுக்கு சவால் விட்டதும் பரபரப்பாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ‘’எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்! 2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும். இந்த தொகுதியில் […]
அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்… பாஜ விளையாட்டைத் தொடங்குமா..?

’அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்திருக்கும் விவகாரம் பாமகவினரை அதிர வைத்திருக்கிறது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் […]
அண்ணாமலை புதுக்கட்சி..? ஆதரவாளருக்கு கட்டம் கட்டிய நயினார்

அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளரான ஜானிராஜாவை பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் கட்டம் கட்டியிருக்கும் விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. இதனாலே கும்பகோணம் மீட்டிங்கில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் பாஜ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான மாநாட்டில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. புயல் பாதிப்பு காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையில் அவரது ஆதரவாளரை நீக்கிய நயினாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. நேற்றைய தினம் திருவள்ளூர் மேற்கு […]

