News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்துக்களுக்கு எதிரியா விஜய்..? கருணாநிதி பாணியில் மாநாட்டுக்கு மூன்றாவது அழைப்பு

’நம்முடைய மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பிவிட்டாயா உடன்பிறப்பே…’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தினம ஒரு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருப்பார். அதே பாணியில், ‘மாநாட்டுக்கு வாங்க’ என்று விஜய் மூன்றாவது கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார். பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருக்கும் விஜய்யை இந்து மத விரோதி என்று சித்தரிக்கும் வேலை நடக்கிறது.   2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் என்று மூன்றாவது […]

நித்தி, ரஞ்சிதாவை இனியாவது பிடிப்பாங்களா..? நீதிமன்றம் கடும் கண்டனம்.

நடிகை ரஞ்சிதாவுடன் கட்டில் லீலைகள் அம்பலமானதும் நித்தியானந்தா சிறைக்குப் போவார் என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், அவரோ கைலாசா என்று தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டு ஜாலிப் பேர்வழியாக தினம் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அவருடன் இருக்கும் நடிகை ரஞ்சிதாவும், ‘நான் இவருடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்று வீடியோவில் பேசுகிறார். கைலாசாவின் ஜனாதிபதியாக நித்தியானந்தாவும் பிரதமராக ரஞ்சிதாவும் இருந்து லீலைகள் புரிந்துவரும் நிலையில், இவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் […]

சினிமா புரமோஷன் செய்கிறாரா சீமான்.? சிக்கலில் ஒற்றை பனைமரம்

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும், ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் சீமான் பொங்கியெழுந்திருக்கிறார். ’ஒற்றைப் பனைமரம் படத்திற்கு விளம்பரம் கொடுப்பதற்காகவே சீமான் இப்படி பேசியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தியது போன்று அவமானப்படுத்தும் சீமானுக்கு இப்படி பேச உரிமையே இல்லை என்று படக்குழுவினர் கொதிக்கிறார்கள். இன்று ஒற்றை பனைமரம் குறித்து செந்தமிழன் சீமான், ‘’தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த […]

மழையைத் தடுக்க விஜய் யாகம்..? அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட் வில்லங்கம்

இன்னும் மூன்றே நாட்களில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடக்கயிருக்கும் நிலையில், 27ம் தேதி மழை வரக்கூடாது என்று விஜய் கட்சியினர் யாகம், பூஜை நடத்தியது வில்லங்கமாக மாறிவருகிறது. நடிகர் விஜய்யும் வீட்டில் மழையைத் தடுக்க பிரத்யேக யாகம் நடத்தியதாகப் புகார் சொல்கிறார்கள். வரும் 27ம் தேதி விக்கரவாண்டியில் நடக்க இருக்கும் விஜய் மாநாட்டுச் செய்திகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோருடன் நடிகர் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டது […]

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை பிரியங்கா தாக்கல் செய்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார்.   ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே அவர் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் தனது வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]

தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நெல்லைக்கு சிறப்பு ரெயில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.   தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.   பண்டிகையை சொந்த […]

எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மிரட்டுகிறதா..? சேலத்திலும் ரெய்டு

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் இருந்துவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலையைத் தொடரவிரும்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் சேர்ப்பதற்காகவே சேலம் இளங்கோவன் மற்றும் வைத்திலிங்கம் ரெய்டுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடியின் வலது கரமாக சேலம் இளங்கோவன் இயங்கிவருகிறார். திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்ஐடி காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்ட் கல்லூரி ஆர்.இளங்கோவனின் மகன் பீரவின் குமார் தலைமையில் இயங்கி வருகிறது. இங்கு திருச்சி வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு […]

வசூல் வேட்டையா… கூட்டணி மாற்றமா..? திருமாவளவன் கட்சியில் பிரமாண்ட மாற்றம்

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கிறது. குறிப்பிட்ட மாவட்டத்தில் இவர்கள் தான் சகல அதிகாரத்துடன் திகழ்வார்கள். தங்களுக்குக் கீழ் இருக்கும் சகல நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வாங்கிக்கொடுத்து, அதில் வசூல் செய்து, அவர்களுக்கும் கட்சிக்கும் செலவழிப்பார்கள். முக்கியக் கட்சிகளில் எல்லாம் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் […]

பன்னீருக்கு துரோகம் செய்ததால் வைத்திலிங்கத்துக்கு ரெய்டு..? களம் இறங்கிய அமலாக்கத்துறை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் ஒரே பிரபலமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் பா.ஜ.க. மூலம் வைத்திலிங்கத்துக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ரெய்டு நடப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இப்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் இடம்பிடித்துள்ளார். இவர் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற […]

புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை: 3 இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!

புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை வா வா என்று அழைத்து வீடியோ எடுக்க முயற்சித்த 3 இளைஞர்களை சிறுத்தை  பாய்ந்து வந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   மத்தியபிரதேசத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு ஜெய்த்தூர் காடுகளில் உதவி சப்இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஷா (வயது 23) மற்றும் நந்தினி சிங் (வயது 25) ஆகிய மூவர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 50 முதல் 60 பேரும் சுற்றுலா […]