மொசாம்பிக் நாட்டையே புரட்டிப் போட்ட சூறாவளி அதிர்ச்சி தகவல்.

மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது . இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர் . 319 பேர் காயமடைந்து உள்ளனர் சூறாவளியால், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்தநாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து […]
எலி கடித்ததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவியை 15 முறை தொடர்ந்து எலி கடித்ததால் அவரது கை மற்றும் கால் செயலிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள கம்மம், தானவாய் குடத்தில் பி.சி. நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி பவானி கீர்த்தி என்ற 10ம் வகுப்பு மாணவி தங்கி படித்து வந்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் மாணவியை 15 […]
அம்பேத்கருக்கு அவமானம். அமித்ஷாவுக்கு எதிராக போர்க்கொடி

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அம்பேத்கர் மீது அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிடது. அம்பேத்கர் பெயரைச் சொன்னால் என்ன கிடைக்கும், கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும் என்கிறார். அம்பேத்கர் பெயர் சொன்னதால் […]
அதானி சென்னையில் ரகசிய சந்திப்பு..? தகவல் அறியும் சட்டத்தில் கிடைத்த பதில் என்ன தெரியுமா?

‘நான் அதானியை சந்திக்கவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துவிட்டார் என்றாலும் அதானி யாரை சந்தித்தார் என்பதைச் சொல்லவில்லை. சபரீசனை சந்தித்தாரா அல்லது அரசு அதிகாரிகளை சந்தித்தாரா என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்தது. இதற்கு தகவல் அறியும் சட்டத்தில் கிடைத்த பதில் என்ன தெரியுமா..? இது குறித்து அறப்போர் இயக்கத்தினர், ‘’லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி உள்ளது என்ற செய்தி வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே கௌதம் […]
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா… முடிவு என்னாகும் தெரியுமா..?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. இந்த தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மொத்த 461வாக்குகளில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையான 307 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் அரசுக்கு 269 வாக்குகள் மட்டுமே கிடைத்தது, எதிர்க்கட்சி 196 வாக்குகள் பெற்றிருந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்துவிட்டது. கீழே விழுந்தாலும் […]
சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யூடியூபர் தொடர்ந்து தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதன்தொடர்ச்சியாக கடந்த மே மாதம் காரில் 2.5 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர் கைது […]
கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா அதிர்ச்சி பின்னணி !

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் . கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக […]
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! இடைத்தேர்தல் எப்போது?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளில் 159 இடங்களை கைப்பற்றிய தி.மு.க. ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தாங்கள் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. […]
அ.தி.மு.க.வுக்கு இவர் தான் புதிய பொருளாளரா? இரட்டை இலைக்கு மீண்டும் மிரட்டல்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறிவந்தாலும், அதற்கு பா.ஜ.க. முழுமையாக உடன்படவில்லை. கூட்டணி இல்லை என்றால் இரட்டை இலை முடக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்துவருவதாக சொல்லப்படுகிறது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சொந்தமானது என்பதை தேர்தல் கமிஷன் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக […]
கனிமொழியிடம் மல்லுக்கட்டும் தமிழிசை… பிரதமர் நிதி வாங்கித்தருவாரா.?

கடந்த புயல், மழை, வெள்ள நேரத்தில் தூத்துக்குடி மக்களுடன் மக்களாக நின்ற கனிமொழி, இப்போது பெய்திருக்கும் மழை, வெள்ளம் குறித்து, ‘தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை’ என்று கூறிவிட்டார். அதோடு நிவாரண நிதி வழங்கவும் செல்லவில்லை. இதனை தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பிய காரணத்தால் ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் திரண்டுவந்து தாக்குகிறார்கள். தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கனிமொழி ஆய்வுகள் மேற்கொண்டார். இது குறித்து அவர், ‘’தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஏரல் பாலம் பகுதியில் இன்று அரசுத்துறை அதிகாரிகளுடன் […]

