News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மோகன்லால் மன்னிப்பு கேட்கணும்… கொந்தளிக்கும் வேல்முருகன்

சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டுட்ம் என்று ஆவேசக் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இது குறித்து வேல்முருகன், ‘’மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, […]

பெப்சி பாட்டில் ஷேப் அழகி! திவ்யபாரதி ஹாட் ஸ்டில்ஸ்!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கிங்ஸ்டன் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும், திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.  

ஆதவ் அர்ஜுனாவுக்கு பணம் கட்… விஜய் கட்சி பதவிக்கு ஆபத்து.?

விஜய்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது, முதலமைச்சர் ரேஸில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்று ஒரு சர்வே வெளியானதில் ஆதவ் அர்ஜூனா பெயர் அடிபட்டது. அவரது சொந்தப் பணத்தில் இப்படியொரு சர்வே செய்து வெளியிட வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த சர்வேயில் அண்ணாமலைக்கு உரிய மதிப்பு கொடுக்கவில்லை. அதோடு முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணாமலையை ஆடு என்று கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார். இந்த விவகாரம் பா.ஜ.க.வில் இருக்கும் மார்ட்டின் குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து அவரது […]

விஜய்க்கு மீண்டும் 2வது இடம்..? ஓர் ஆண்டு சாதனைகள் தெரியுமா..?

விஜய் கட்சி தொடங்கி ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறிவிடுவார் என்று கூறப்படும் நேரத்தில், அவரை உயர்த்திப் பிடிக்கும் தேர்தல் வியூக வேலைகள் தொடங்கிவிட்டன. சி வோட்டர் கருத்துக்கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வெளியிடப்பட்டது என்று புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மிகவும் சக்திவாய்ந்த நூறு நபர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல்வர் மு […]

அண்ணாமலை அடிமையாக இருப்பாரா… புதுக் கட்சி தொடங்குவாரா?

சமீபத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை, ‘’அதிமுக கூட்டணி குறித்து நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அமித்ஷாவின் கருத்தை, இறுதி கருத்தாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. பாஜ மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம். நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன்’’ என்பதையே திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னார். இதையடுத்து பா.ஜ.க.வில் இருக்கும் அண்ணாமலை […]

புது ரூட்டில் பிரேமலதா… உருப்படுமா இந்த யோசனை?

ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னமும் பிரேமலதா விஜயகாந்திற்குத் தணியவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணிப் பேச்சும் அவரை திணற வைத்திருக்கிறது. எனவே, புது ரூட்டில் ஒரு காய் நகர்த்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகியோர் வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக காவல் துறைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். இது தி.மு.க.வுக்கு காட்டும் பச்சைக் கொடி என்கிறார்கள். இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், ‘’உசிலம்பட்டி […]

அமித்ஷா கூட்டணி அறிவிப்பு… செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை..?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பத்தகாத பல நிகழ்வுகள் கட்சிகள் அரங்கேறி வருகின்றன. அமித்ஷாவை சந்தித்து வந்தவர் கூட்டணி குறித்து இப்போது பேசவில்லை என்று அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அமித்ஷா அறிவித்துவிட்டார். இதே காலகட்டத்தில் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்று பன்னீர்செல்வம் எச்சரிக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்று அவரது […]

நீட் மரணத்துக்கு எண்ட் இல்லையா..? மீண்டும் ஒரு மாணவி பலி

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்த பிறகும் நீட் ரத்து செய்ய முடியவில்லை. தொடர்ந்து மரணங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தர்ஷினி கடந்த 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனாலும் போதிய கட் ஆஃப் கிடைக்கவில்லை. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று […]

கூண்டுக்கிளி என்று விஜய்யை அசிங்கப்படுத்திய நிர்வாகி. மனைவி எங்கேப்பா..?

விஜய் கட்சியான த.வெ.க. பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா வந்திருக்கிறார்கள். இன்றைய தினமும் விஜய்யின் மனைவி, பிள்ளைகள் வரவில்லை என்பதை சீமான் கட்சியினர் எடுத்துப் போட்டு விளாசிவருகிறார்கள். தமிழ்நாட்டில் வெளியே வரவே எல்லோருக்கும் அச்சமாக இருக்கிறது என்று பெண் நிர்வாகி பேசிய நிலையி,, நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து கட்சிக்கு புதிதாக வந்திருக்கும் சி.டி.நிர்மல்குமார், ‘’எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதாக நினைத்துக்கொண்டு, கூண்டுக்கிளியாக வீட்டுக்குள் இருந்துகொண்டு […]

மீண்டும் லண்டனுக்கு அண்ணாமலை? அடுத்த தலைவருக்கு கடும் போட்டி

எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட்டிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கிறதோ இல்லையோ, அண்ணாமலை ஆதரவாளர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அமித் ஷா சந்திப்பு நடந்திருப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு என்னைப் போடுங்கள் என்று ஒரு பெரும் பட்டாளமே அமித் ஷாவுக்கு வரிசையாக ஓலை அனுப்பிவருகிறார்கள். தன்னைத் தவிர வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நினைத்துவரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடந்துவருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி […]