News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ருத்ரதாண்டவம். நிதிக்குப் பதிலாக ஜல்லிக்கட்டு?

தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய குரலுக்கு மத்திய நிதியமைச்சர் சம்பந்தமே இல்லாமல் ஆவேசமாக ஜல்லிக்கட்டு விவகாரத்தை எழுப்பி விவகாரத்தை திசை திருப்பியிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இன்று நிர்மலா சீதாராமன், ‘’தி.மு.க.வினர் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தது, அதற்கு தி.மு.க. சைலன்ட் பார்ட்னராக இருந்தது’ என்று பேசினார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததும் தமிழ் மொழியிலே […]

விஜய்க்குப் பாதுகாப்பு… சீமானுக்கு ஜெயில்..?

அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், உடன்பிறப்புகள், நாம் தமிழர் தம்பிகள் ஆகியோருடன் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகர், ‘விஜய் வெளியே வந்தால் முட்டை அடிப்போம்’ என்று கூறியதை அடுத்து உடனடியாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதம் தாங்கிய 8 -11 சிபிஆர்எஃப் வீரர்கள், காவல்துறை படையினர் ,தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு […]

டெல்லிக்குப் போகும் கமல்ஹாசன், பிரேமலதா… வைகோவுக்குக் கல்தா

தமிழகத்தில் வரும் ஜூலை 24ம் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனும் அ.தி.மு.க. சார்பில் பிரேமலதாவும் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.யாக இருக்கும் வைகோவுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்றும் தெரியவருகிறது. மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடைகிறது. அந்த வகையில் 2025, […]

பேய்க்கும் பேய்க்கும் சண்டை. சீமான் தம்பிகளுடன் விஜய் ரசிகர்கள் மோதல்

விஜய் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என்று தெரியவந்திருக்கும் நிலையில், பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து இரண்டு பக்கமும் ;பற்றி எரிகிறது. செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான், ‘’தமிழகத்தில் மக்களுடன் கூட்டணிவைத்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில் எனக்கு நாட்டமில்லை. […]

கைது ஆவாரா கஞ்சா கருப்பு..? அமைச்சர் பகிரங்க மிரட்டல்

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருநதன. திமுக ஆட்சியில் சரியில்லை. செத்த பிணத்துக்கு சிகிச்சை பார்க்கிறார்கள் என்றெல்லாம் வீடியோ போட்டு வைரல் செய்த நடிகரும் அ.தி.மு.க. உறுப்பினருமான கஞ்சா கருப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நடந்த சம்பவம் குறித்துப் பேசும் நடிகர் கஞ்சா கருப்பு, ‘கால் வலி படுத்தி எடுத்திட்டிருந்தது. அதனால போரூர்ல இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். ஆஸ்பத்திரின்னாலே எமர்ஜென்சிக்காகத்தான் வருவாங்க. அதனாலதான் 24 மணி நேரமும் அது […]

விஜய் கட்சியின் குழந்தைகள் அணி தலைவர் யார்..? அண்ணாமலை கிண்டல்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் சமூகவலைதளத்தில் பரபரப்பாகிவருகிறது. இதில் மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. திருநர் அணியும் குழந்தைகள் அணியும் படு சர்ச்சையாகியுள்ளன. திருநர் அணி என்பதை 9வது எண் பட்டியலில் சேர்த்து வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் விஜய் என்று லிவிங் ஸ்மைல் வித்யா கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இதற்கு விஜய் கட்சியினர் அவரை தி.மு.க.வை […]

பழனிசாமிக்கு இரட்டை மிரட்டல்? பா.ஜ.க. வலையில் விழுவாரா?

மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் ஆயுதங்களாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இயங்கிவரும் நிலையில், தேர்தல் ஆணையமும் மோடிக்கு ஆதரவாகவே இயங்குகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை விசாரணையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்திருக்கிறது.   அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் திரு கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன், மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து […]

பிரசாந்த் கிஷோர் ரீல் அந்துபோய் ரொம்ப நாளாச்சு. வெளுத்துக்கட்டும் நாம் தமிழர்கள்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு, விஜய்க்கு வரும் 2026 தேர்தலில் 15 – 20% வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாக அவரது நிர்வாகிகள் குஷியாகிறார்கள். மேலும், விஜய் நேரடியாக களத்தில் இறங்கும்போது 30% ஆகும் என்றும் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபோர் வாக்கும் சேரும்பட்சத்தில் 40% மேலாக வாங்கி தனிப்பெரும் கட்சியாகி […]

ஜாதிக் கட்சிகளை ஒன்று திரட்டும் அன்புமணி. பா.ஜ.க. கூட்டணி அசைன்மென்ட்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பும் நிலையில் பா.ஜ.கவுடன் தொடரவே அன்புமணி ஆசைப்படுகிறார். அதற்கு முன்னோட்டமாகவே ஜாதிக்கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டிருக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது. நாடு முழுக்க மதம் ரீதியாக மக்களை ஒன்று திரட்டி, மதக்கலவரத்தைத் தூண்டி ஆட்சிக்கு வருவது பா.ஜ.க. ஸ்டைல். அது தமிழகத்தில் எடுபடவில்லை என்று ஜாதி ரீதியாக ஒன்று திரட்டுவதற்கு முயற்சி செய்தது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோரைக் கொண்டு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி […]

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் இப்போது விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு விஜய் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியும் கடும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இன்று நடிகர் விஜய் தைப்பூசத்தை முன்னிட்டு, ‘’தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!’’ […]