News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆளுநர் ஆர்.என். ரவி ராஜினாமா செய்வாரா..? சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் விளாசல்

தமிழக அரசு இரண்டாவது முறை அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தது தவறு – கவர்னருக்கு என தன்னிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு அனுப்பிவைக்கும் தீர்மானங்களை அப்படியே நிறுத்தி வைத்து ஆட்டம் காட்டிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் […]

நயினார் நாகேந்திரனுக்கு யோகம் அடிக்கிறது.? அண்ணாமலை அப்செட்

அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து மாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையை, அண்ணாமலையே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறார். சமீபத்தில் மீடியாவிடம் பேசிய அண்ணாமலை, ‘’தமிழக பாஜ தலைவர் ரேசில் நான் இல்லை’’ என்று அறிவித்தார். அதன் உச்சபட்சமாக இப்போது, ‘நான் மோடிக்காகவே அரசியலுக்கு வந்தேன். அவர் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கட்சிப் பதவியில் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அண்ணாமலை […]

தனி ஒருவனாக செங்கோட்டையன்… கட்டம் கட்டுவாரா எடப்பாடி பழனிசாமி..?

மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மத்திய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் தனி ஒருவனாக சட்டசபையில் நின்று பேசிய விவகாரம் அ.தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையில் உறுப்பினர்களின் கேள்விக்கு […]

யாரு அந்த தியாகி..? சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி

தமிழகத்தில் சட்டமன்றம் களை கட்டிவருகிறது. தினம் ஒரு மோதல், தினம் ஒரு அறிக்கை என்று மக்கள் பிரச்னைகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, ‘அந்த தியாகி யார்?’ என்று பேட்ஜ் அணிந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இது தமிழகம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் […]

குடும்பத்தோடு சிக்குகிறார் அமைச்சர் நேரு..? சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். தமிழக அமைச்சர்களில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுபவர் நேரு. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராகவும் தி.முக.வின் முக்கியப் புள்ளியாகவும் இருப்பவர். கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் டி.வி.ஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை […]

நூலகம் சர்ச்சையில் சீமான்..? நிர்மலா சீதாராமனுடன் ரகசிய சந்திப்பு?

சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்து திருச்சியில் காமராஜர் நூலகம் என்று பிரமாண்டமாக நூலகம் அமைத்துவரும் தமிழக அரசு மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் வீசிவரும் அவதூறுகள் கடுமையான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. இந்த நூலகங்கள் குறித்து சீமான், ‘’இப்ப யாரு புத்தகம் படிக்கிறா… நூலகத்துக்கு காதலிக்கிறவங்க மட்டும் தான் வருகிறார்கள்’’ என்று அபாண்டமாகப் பேசியிருந்தார். அதேபோல் சாட்டை துரைமுருகனும், ‘’இன்னைக்கு நாம எந்த படத்துக்குப் போகலாம்னு பேசுறதுக்குத்தான் நூலகத்துக்கு வருகிறார்கள்’’ என்று குற்றம் சுமத்தி […]

விஜயகாந்த்துக்கு அலகு குத்தி… காவடி எடுத்து..? என்ன காமெடி பிரேமலதா இது..?

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பேர் வைத்துக்கொண்டு, பிரேமலதா செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கின்றன. விஜயகாந்த் மரணத்துக்குப் பிறகு, அவரது கட்சி அலுவலகத்தை கேப்டன் ஆலயம் என்று பெயர் மாற்றினார். இதையடுத்து நாள் தோறும் அங்கு வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில், கேப்டன் ஆலயத்தில் விஜய்காந்த் பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள் என்று பிரேமலதா இன்று பதிவு போட்டிருக்கிறார்கள். விஜயகாந்த்தை கடவுளாக […]

நடிகர் விஜய்க்கு கடைசி வாய்ப்பு… சீமானை ஜெயிக்க முடியுமா?  

கூட்டணி ஆட்சி என்று அழைப்பு கொடுத்ததும் தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பக்கம் தாவி வந்துவிடும் என்று கணக்கு போட்டார் நடிகர் விஜய். அவரது கணக்கு தப்புக்கணக்கு ஆனது. அதோடு, இப்போது ஒரே ஒரு கட்சி மட்டுமே அவரது கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணி இப்போது மிகவும் வலிமையாக உள்ளது. எனவே, அங்கிருந்து யாரும் வெளியே வரப்போவதில்லை என்பது உறுதி. அதேநேரத்தில் திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் […]

கச்சத் தீவை மீட்டு வருவாரா மோடி..? இலங்கை பயண எதிர்பார்ப்புகள்

மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6 ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் பேசியதை அடுத்து, அதனை மீட்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைக்குச் சென்ற நரேந்திரமோடி இது குறித்து, ‘’கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். மழையிலும் என்னை […]

அண்ணாமலை இமயமலை பயணம் ஏன்? வார் ரூம் அலப்பறைகள்

தமிழக பா.ஜ.க.வில் குழப்பம் வரும் நேரத்தில் எல்லாம் அண்ணாமலையை பண்டல் கட்டி எங்கேனும் அனுப்பிவைப்பதை டெல்லி பா.ஜ.க. வழக்கமாக வைத்திருக்கிறது. லண்டனில் 6 மாதம் படிப்பு முடித்த அண்ணாமலை அடுத்து இமயமலைக்குச் செல்கிறாராம். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அண்ணாமலை, ’’தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. தமிழக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை. சேர்ந்தே தேர்வு செய்வோம்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து […]