விஜய் எலுமிச்சம்பழத்தைத் தூக்கிட்டாங்க…. திமுகவில் வைஷ்ணவி

சினிமா நகைச்சுவையில் நடிகர் சிங்கமுத்து, ‘தூக்கட்டா…. தூக்கட்டா’ என்று கூறிவிட்டு கடைசியில் எலுமிச்சம்பழத்தைத் தூக்குவது போன்று, விஜய் கட்சியில் இருந்து சோஷியல் மீடியா பிரபலம் வைஷ்ணவியை திமுகவில் இணைத்துவிட்டு ஜம்பம் காட்டி வருகிறார்கள். விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் பதவி தரவில்லை என்று குற்றம்சாட்டியும், நிர்வாகிகள் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் விமர்சித்தும் கட்சியில் இருந்து வெளியேறினர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த […]
நயினாரின் வார் ரூம் வார்னிங்… அண்ணாமலை அமைதிக்குப் பின் அணுகுண்டு

தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக தில்லு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதன் பிறகும் அண்ணாமலை வார் ரூம் செயல்பாடுகள் குறையவில்லை என்றாலும் அண்ணாமலை மட்டும் கப்சிப் என அமைதியாக இருக்கிறார். இதையடுத்து மீண்டும் உருவாகிறது சர்ச்சை புயல். முன்னதாக தமிழிசை செளந்தரராஜன் பொதுவெளியில் அண்ணாமலையின் வார் ரூம் செயல்பாடுகளைக் கண்டித்தார். அதற்கு அமித்ஷாவிடம் இருந்து எதிர்வினை வந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு […]
டாஸ்மாக் செந்தில் பாலாஜிக்கு செம குஷி…. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ள விவகாரம் திமுகவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை திமுகவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிவில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் […]
மதுரையில் சட்டவிரோத குவாரிகள்..? தமிழக எம்.பி. புகாருக்கும் மதிப்பு இல்லை

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசனே மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி குறித்து வெளிப்படையாக புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். இது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், […]
சீமானுக்கு இருக்கும் அக்கறை யாருக்கும் இல்லையே… அச்சத்தில் அகதிகள்

இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை என்று வெளிநாட்டு அகதிகளுக்கு கெட் அவுட் கூறியிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அத்தனை கட்சியினரும் அமைதியாக இருக்கையில், சீமான் மட்டுமே உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார். சீமான் அறிக்கையில், ‘’நாம் தமிழர் கட்சி இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க […]
மாப்பிள்ளையின் ஆள் ஆதவ் விஜய் டீமில் ஸ்லீப்பர் செல்..? கொதிக்கும் அதிமுக

நடிகர் விஜய் கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதில் கூட்டணி பற்றி ஆதவ் பேசிய விவகாரத்துக்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. விஜய்யை ஆதவ் அர்ஜுனா தவறாக வழி நடத்துவதாக அவரது கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பேசும் த.வெ.க.வினர், ‘’வஃக்ப் போர்டு மேட்டர் குறித்து பேசுவதற்கு மட்டுமே ஆதவ் அர்ஜூனா அனுப்பிவைக்கப்பட்டார். தி.மு.க.வை எதிர்த்து கடுமையான கருத்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அதிமுக கூட்டணி குறித்து […]
அரக்கோணம் மாணவிக்கு இபிஎஸ் போராட்டம்… தமிழகத்தை கலக்கும் போஸ்டர்கள்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது போலவே, ‘அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ என்று சொல்லி போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர், ‘’ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக […]
பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்..? எல்லாமே நாடகமா ராமதாஸ்..?

டாக்டர் ராமதாஸ் நடத்திவரும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்துவரும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எழுந்திருக்கும் பரபரப்புக்குப் பின்னே இருக்கிறது, தேர்தல் நாடகம். நேற்று தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்திருந்தார். வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள், 62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை […]
கனிமொழிக்கு பா.ஜ.க. மரியாதை, அதிமுகவுக்கு கெட் அவுட்

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்துவிட்டார் என்றாலும், கட்சி மேலிடத்திலும் ஒற்றுமை நிலவுவதாகத் தெரியவில்லை. அதனாலே வெளிநாடுகளுக்கு அனுப்பும் எம்.பி.க்கள் குழுவில் திமு.க.விற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளின் நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்லும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது கூட்டணியில் இருக்கும் […]
விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம்..? வைரலாகும் யார் அந்த தம்பி போஸ்டர்

அமலாக்கத்துறை மூலம் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் திமுகவினருக்கு பெரும் கலக்கமாக மாறியிருக்கிறது. இன்று சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்படி டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ரத்தீஷை உதயநிதியின் பிரதிநிதியாகப் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலிடம் கூறிய தகவல்கள் படி விசாகன் ஐ.ஏ.எஸ். அவருக்குத் தெரிந்த […]

