News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

கண்ணகிநகர் கார்த்திகாவுக்கு ஸ்டாலின் அவமானம்..? நிதி புறக்கணிப்பு

பஹ்ரைனில் நடைபெற்ற இளையோருக்கான ஆண் மற்றும் பெண் கபடி விளையாட்டுப் பிரிவில் இந்திய அணி சார்பில் கார்த்திகா, அபினேஷ் ஆகியோர் பங்கேற்ற அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தது. இவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விவகாரத்தில் திருமாவளவன், ‘’தமிழ்நாடு அரசு இவ்விரு சாதனையாளர்களுக்கும் ரூ. 25 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், அவ்விருவருக்கும் தலா ஒரு கோடியாக உயர்த்தி வழங்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். […]

அன்புமணி இடத்தில் காந்திமதி. சின்னாபின்னமாகும் ராமதாஸ் மூவ்

தர்மபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் காந்திமதியை, கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்த விவகாரம் பாமக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன் குடும்பத்துக்குள் கை மாற்றுவதற்கு பாமக என்ன தனிக்குடும்பத்து சொத்தா என்ற கேள்வியை பாட்டாளிகள் கேட்கிறார்கள். பாமகவில் வெளிப்படையான பிரச்னை விழுப்புரம் மாநாட்டில் வெளிப்பட்டது. அப்போது பாமக இளைஞர் சங்க தலைவராக தனது மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி […]

மகாபலிபுரத்தில் 50 ரூம்கள். விஜய்க்கு ஆறுதல் கூற வரும் குடும்பங்கள்

கரூர் நெரிசலில் மரணமடைந்த குடும்பங்களை நேரில் பார்வையிடச் செல்கிறார் விஜய் என்பதே ஒரு மாதமாக பேசுபொருளாக இருந்துவந்தது. இந்த நிலையில், 20 லட்ச ரூபாய் 39 குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது. கரூர் அல்லது நாமக்கல் பகுதியில் நிகழ்ச்சி நடத்தி ஆறுதல் கூறுவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரவில்லை. ஆகவே, அவர்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து, மகாபலிபுரம் தனியார் விடுதியில் வைத்து நாளை ஆறுதல் கூறுவது உறுதியாகியுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் பெரும்பாலோர் விஜய்யை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். […]

உதயநிதி அபாண்டமாக பொய் சொல்லலாமா..? வைரலாகும் பூங்கொடி வீடியோ

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி விசிட் செய்த நேரத்தில் பூங்கொடி என்ற பெண் விவசாயி, முளைத்த நெல்லை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டியிருந்தார். இதற்கு உதயநிதி, அந்த பெண்ணின் வயலில் நெல் அறுவடையே இன்னமும் நடைபெறவில்லை, அதற்குள் எப்படி நெல்லைக் கொண்டுவந்து காட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி, ‘’நான் 5 ஏக்கரில் குத்தகை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ள குறுவை நெற்கதிர்கள், அண்மையில் பெய்த மழையில் நனைந்து […]

மகாபலிபுரத்தில் விஜய் சந்திப்பு… தவெகவுக்குள் உட்கட்சி மோதல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கட்கிழமை  மகாபலிபுரத்தில் சந்திக்க இருக்கும் நிலையில், உட்கட்சியில் மோதல் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரில் சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டார். ஆனால் சாலை மார்க்கமாகச் செல்லும்போது அது சாத்தியம் இல்லை. கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறியதால், அனைத்து குடும்பத்தினரையும் கரூரில் உள்ள ஏதேனும் ஒரு மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் கரூரில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது எனக் […]

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி..? நச்சுன்னு பதில் வந்தாச்சு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியான பீட்டர் அல்போன்ஸ் வரும் தேர்தலில் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிவருகிறது. அவர் இது குறித்து, ‘’இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக எப்படி உடனடியாக மாற்ற முடியாதோ, அதுபோல இது அரசியல் சக்தியாக மாறுமா, அதற்கு அவர்கள் தகுதியானவர்களா, அத்தகைய கட்டமைப்பு அவர்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. கரூர் போன்ற ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், நாட்டின் […]

இரண்டே நாளில் 2000 கோடிக்கு அனுமதி..? என்ன ரகசியம் ஸ்டாலின்..?

பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்டுவதற்கு பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி கொடுத்திருப்பதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அறப்போர் ஜெயராமன், ‘’சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக […]

வேலுமணியை காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்..? அதிகாரிகளுக்கு ஜாக்பாட்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறையில் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். ஆனால், இன்னமும் வேலுமணி மீது மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் குட்டு வாங்கியிருக்கிறது திமுக அரசு. கடந்த 2022ம் ஆண்டில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய […]

புதிய ஸ்டைலில் விஜய் டூர்…. அதிமுகவுக்கு பதிலடி… வைரலாகும் த்ரிஷா.

கரூர் அசம்பாவிதத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இன்னமும் வெளியே வரவில்லை. இம்மாத  இறுதியில், திடீர் பயணமாக ஒரு நாள் கரூர் செல்வார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த மாதங்களில் இரண்டு மிகப்பெரும் கூட்டங்களுக்கு புதிய ஸ்டைலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதேநேரம், விஜய் த்ருஷா புதிய படம் ஒன்று வைரலாகிறது.   விஜய் த்ரிஷா இருக்கும் படம் போலி என்று விஜய் ஆதரவாளர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினாலும் திமுகவினர் இந்த படத்தை வைரலாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் விஜய் […]

கொட்டும் மழையில் வயலில் இறங்கி ஆய்வு… இபிஎஸ் அதிரடி

அடாது கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அது மட்டுமல்லாது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு இருக்கும் நெல் மணிகளும் முளைக்க தொடங்கி விட்டன. போதிய அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணங்களால் விவசாயிகள் […]