விஜய் கூட்டத்தில் கத்திக்குத்து..? திமுகவை மிரட்டும் ஆதவ் அர்ஜூனா பயணம்

விஜய் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதே இத்தனை ரகளைகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கத்திக்குத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்குப் போயிருப்பது திமுகவை பாஜகவும் தவெகவும் ஒன்று சேர்ந்து மிரட்டுவதாகவே கருதப்படுகிறது. கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த பாஜகவால் அமைக்கப்பட்ட ஹேமமாலினி தலைமையிலான எம்பிக்கள் குழு, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
விஜய்யை அபேஸ் செய்யும் பாஜக… பக்கா ஸ்கெட்ச்

கரூர் சம்பவம் நடந்தபிறகு விஜய் வெளியில் எங்கேயும் வரவே இல்லை. அவரது நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாகவும், பாஜக ஸ்கெட்ச் போட்ட வழியிலே விஜய் வீடியோ வெளியிட்டு திமுக அரசை குற்றம் சாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விஜய்யைக் காப்பாற்றவும் திமுகவை குறை கூறவும் நேரடியாகவே பாஜக களம் இறங்கிவிட்டது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவைப் போடுவதற்கு விஜய்க்கு மூன்று நாட்களாகியிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த துப்பில்லை. ஏனென்றால் அங்கே […]
அன்புமணி அழுகை, அன்பில்மகேஸ் அழுகை… முட்டி மோதுறாங்க

கரூர் நெரிசல் மரணங்களை வைத்து இப்போது அரசியல் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. சம்பவம் நடந்தவுடனே மருத்துவமனைக்கு ஆஜரான செந்தில்பாலாஜி மற்றும் அன்பில் மகேஸ் மீது பரபரப்பாக குற்றம் சுமத்தப்படுகிறது. செந்தில்பாலாஜியே காரணம் என்று விஜய் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதிவைத்து தற்கொலையே செய்திருக்கிறார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், “கரூர் துயர சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும். மக்களை […]
ஃபெலிக்ஸை தூக்கிட்டாங்க… அடுத்தது ஆதவ் அர்ஜூனா..?

கரூர் நெரிசல் மரணங்களில் புதுப்புது வகையில் சந்தேகம் எழுப்பினார் டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்த ஃபிலிக்ஸ். அதாவது, 12 பேர் மேல கத்திய வெச்சி குத்தி கிழிச்சிருக்கானுங்க, – ஒரு அம்மா மேல வண்டி விழுந்துடுச்சு, அவங்கள காப்பாற்றாமல் மிதிச்சிருக்கானுங்க, – கழுத்தை மிதிச்சி கொலை பன்னிருக்கானுங்க என்றெல்லாம் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள், ‘’பேரணியின் போது செருப்புகள் மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது. டிவிகே தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களை […]
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் செத்தது எப்படி..? முழு மருத்துவ விளக்கம்

யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்இதுவரை 41 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புஉண்டு என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் நெரிசலில் எப்படி மரணம் நிகழ்கிறது என்பது குறித்துடாக்டர் சபரி தெளிவாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த நெரிசல் மரணம் குறித்து டாக்டர் சபரி, ‘’கூட்ட நெரிசலில்அலைமோதும் போது, இடமே இல்லாமல் ஒருத்தரோடு ஒருத்தர் மோதும் போது மூச்சுத்திணல் ஏற்பட்டுஉயிரிழக்கிறார்கள். இதைத்தான் stampede என்று ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள். •மூச்சுவிடும்போது நுரையீரல் சுருங்கி […]
ஸ்டாலின் கூட்டணியில் குழப்பம்..? விஜய் தைரியத்தில் காங்கிரஸ் உரிமைக்குரல்

காமராஜர் காலத்துக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக தோள் மீது ஏறி பயணிப்பது வழக்கம். இப்போது முதன்முறையாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று ஸ்டாலினிடம் இதுவரை நேரில் கேட்டதில்லை. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்த […]
மருது அழகுராஜ் இத்தனை பல்டி அடித்திருக்கிறாரா..? விஜய் எஸ்கேப்

நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போட்டுவந்தார். விஜய் பக்கத்தில் இருந்து போதிய ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால் அவர் திமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அவரது அரசியல் பாதையை திரும்பிப்பார்த்தால் அதிர வைக்கிறார். அதாவது முதலில் காங்கிரஸ் கட்சி, வாழப்பாடி காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, அதிமுக, அமமுக, அண்ணாமலை ஆதரவாளர், ஓபிஎஸ் ஆதரவாளர், விஜய் கட்சி ஆதரவு என்றெல்லாம் சுற்றிவிட்டு இப்போது திமுகவில் […]
அமுதா ஐ.ஏ.எஸ். திமுகவில் சேர்கிறாரா..? பிரஸ்மீட் பரிதாபங்கள்

விஜய் வீடியோ வெளியானதும், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமுதா ஐ.ஏ.எஸ்., தீரஜ்குமார் மற்றும் டேவிட் ஆசிர்வாதம் ஆகியோர் வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து, கடும் சர்ச்சைகள் உருவாகிவிட்டன. அதாவது, ஆணையம் அமைத்தாகிவிட்டது. அந்த ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று அமுதா அவர்கள் எதற்காக தனி விளக்கம் அதுவும் ஆணையம் விசாரித்துக்கொண்டு இருக்கும் இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியை எடுத்துவைத்தார். அமுதா கொடுத்த பேட்டியில் இருந்த முரண்பாடு இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தவெகவினர் 10,000 […]
கரூர் கொடூர மரணம் நடந்தது எப்படி..? அதிர்ச்சித் தகவல்கள்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் விஜய் நடந்துகொண்டார் என்றாலும் போதுமான பாதுகாப்பு அளிக்க தவறிய காவல்துறையும் மாவட்ட, மாநில நிர்வாகமும் நிச்சயம் பொறுப்பு கேள்வி கேட்க வேண்டியது முதல்வரின் கடமை. கரூரில் முன்னாள் அமைச்சரின் முழுகட்டுபாட்டில் காவல்துறையும், மாவட்ட இயங்குகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த நிலையில் சம்பவம் […]
கரூர் மரணங்களுக்குப் பின் அரசியல் இருக்கிறதா..? விஜய் எப்போது போவார்..?

கரூரில் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலே விஜய் சட்டென விமானம் ஏறி சென்னைக்குப் பறந்துவிட்டார். இன்று நிதியுதவி அளித்துவிட்டு அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட மரணம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பல்வேறு சந்தேகம் உருவாகின்றன. விஜய் எப்போது போவார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் விஜய் அரசியல் மற்றும் கோர மரணம் குறித்து புதிய பார்வை இது. இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள […]

