News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நெல்லை கவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வாரா விஜய்..? சகல கட்சிகளும் கப்சிப்

போலீஸ் அராஜகத்தால் உயிர் இழந்த அஜித்குமார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய், நெல்லையில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்குச் சென்று ஆறுதல் கூற வேண்டும், அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். நெல்லையில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எந்த ஒரு அரசியல் தலைவரும் கண்டனம் தெரிவிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஏனென்றால், சமுதாய ஓட்டுக்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதாலே அமைதி காக்கிறார்கள். […]

மோடி மேடையில் திருமாவளவன்…. கூட்டணிக்குத் திருப்புமுனை?…. நயினாருக்கு புதிய சர்ச்சை

மோடியின் மேடையில் திருமாவளவன் நிற்பதைப் பார்த்ததும் அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப் போவது உறுதி என்று அதிமுகவினர் கொண்டாட்டம் போடுகிறார்கள். அந்த விழா மேடையில் எந்த பதவியிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் மேடை ஏறியது சர்ச்சையாகியுள்ளது. மோடியுடன் திருமாவளவன் மேடை ஏறியது குறித்து விடுதலை சிறுத்தைகள், ‘’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் திரு.நரேந்திர மோடி அவர்கள் […]

குற்றவாளிக் கூண்டில் நீதிபதி…. என்னங்க சார் உங்க சட்டம்..?

இப்போது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஜி.ஆர்.சாமிநாதன் சம்மன் கொடுத்து கேள்வி எழுப்பிய விவகாரம்தான். என்ன நடந்தது என்று விவரமறிந்தவகளிடம் கேட்டொம். இது குறித்து பேசுபவர்கள், ‘’ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ரகசியமாக புகார் அளிப்பது வக்கீலுக்கு நம் நாட்டின் சட்டம் கொடுத்த உரிமை. இதை பயன்படுத்தித்தான் சென்ற மாதம் ஒரு ஹை கோர்ட் ஜட்ஜ் பற்றி ரகசிய புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். ஆனால்… சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த […]

அன்புமணி நடை பயணத்துக்கு ராமதாஸ், திருமாவால் ஆபத்து..? உஷாரய்யா உஷாரு

வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தைத் தொடங்கிய அன்புமணி விவகாரம் எக்கச்சக்க புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவரது பிறந்த நாளில் “உரிமை மீட்க, தலைமுறை காக்க” நடைபயணத்தை தொடங்கியிருப்பதால், சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று காவல் துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் இன்று தொடங்கி […]

சேரன் சினிமாவில் டாக்டர் ராமதாஸ் அன்புமணிக்கு ஃபைனல் வார்னிங்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 87ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி லோக்கல் லீடர் வரை நிறைய பேர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இன்று அன்புமணி நேரில் வந்து சரண் அடையவில்லை என்றால் சட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்று வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பாமக ராமதாஸ்க்கு அண்ணாமலை, ‘’40 ஆண்டுகளுக்கும் மேலாக , தமிழகத்தின் நலனுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்து […]

ஏமாத்திட்டாரே விஜய்… சீக்ரட் ஆலோசனை… சுற்றுப்பயணம் கேன்சல்..?

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அன்புமணி பயணம் செய்கிறார். அதேபோல் பிரேமலதாவும் பயணத்தைத் தொடங்குகிறார். இதையடுத்து விஜய் போட்டிருந்த சுற்றுப்பயணம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்ற ஆலோசனை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை அலுவலகத்தில் மாநாடு பணிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயலி உள்ளிட்டவற்றை நேற்று ஆய்வு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர் […]

ஓபிஎஸ் தலையெழுத்தை மாற்றுவாரா மோடி..? புதிய கட்சிக்கு ரெடி

திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கிறது. அதிமுகவில் இணைப்பு அல்லது புதிய கட்சி என்பதற்கு மோடி வருகை விடை கொடுத்துவிடும் என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகிறார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பிரதமர், அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 26ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்து ஆகுமா..? அண்ணாமலை ஆவேசம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழில் எழுதியவர்கள் யாருமே பாஸ் ஆகக்கூடாது என்பது போன்று கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றத்துக்குப் போவோம் என்றும் எச்சரிக்கை செய்தார்.  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அண்ணாமலையும் ஆவேசம் காட்டியுள்ளார். அண்ணாமலை அவரது பதிவில், ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, […]

மோடிக்கு வார்னிங்..? ஜெகதீப் தன்கர் ராஜினாமா ரகசியம்

உடல் நிலையைக் காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது, மோடிக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில், உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா […]

எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா? எங்கெங்கும் இஸ்லாம் தொப்பி

எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய தொப்பிகள் வழங்கப்படுவதும் அதை அவர் அணிந்துகொண்டு போஸ் கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாகிறது. இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு 69சதவீத முஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றது,25 சதவீதம் அதிமுக கட்சிக்கு வந்தது பிற கட்சிகள் 6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக […]