ஷாருக்கானுக்கு தொடர் கொலை மிரட்டல்! மகாராஷ்டிர அரசு முக்கிய முடிவு!

நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. துவண்டு போயிருந்த பாலிவுட் திரையுலகத்தை நடிகர் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் தூக்கி நிறுத்தியது. இவ்விரு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவ்விரு படங்களுக்கு பிறகு தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் மகாராஷ்டிர காவல் […]
முதலமைச்சர்- அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு! பரபரப்பான அரசியல்களம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பிளவுகளும், கூட்டணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்களை திடீரென்று நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இன்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி […]
முதல்வரிடம் கோரிக்கை மனு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சந்திப்பு!

தமிழக அரசு செய்து வரும் மகளிர் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நேரில் சந்தித்தனர். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்தது […]
கனவு இல்லத்தை பெறும் பயனாளர்களுக்கு வாழ்த்துக்கள்! சேப்பாக்கத்தில் உதயநிதி பேச்சு!

சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 1979ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டுகளில் 392 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்து பழுதடைந்த […]
காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்?

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நிதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் […]
5வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு! கட்டு கட்டாக பணம் பறிமுதல்?

தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க.எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை இன்று 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், […]
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 700 பேர் பலி! இஸ்ரேலில் பயங்கரம்!

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத குழு திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஏவப்பட்ட ஏவுகணைககால் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாபாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு […]
5 மாநில தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் 12 மணிக்கு அறிவிப்பு!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய […]
சந்தியாவை கொலை செய்த சாதிச்சமூகம்! ஒருதலை காதல் போர்வை?

தான் வேலை செய்யும் கடைக்கான பொம்மைகளை குடோனுக்குள் அடுக்கிக் கொண்டிருந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்த 17 வயது சிறுவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறான். எங்கு செல்கிறது இந்த சமூகம் என்ற கேள்வியோடு இந்த கொலையும் அதன் பின்னணித் தகவல்களும் உங்களுக்காக. நெல்லைக்கு மற்றொரு பெயர் என்று சொல்கிற அளவுக்கு உலகளவில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு […]

