ரூ.1,000 கோடியை கடந்த ‘ஜவான்’! அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இதுவரை 1,000 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாலிவுட் திரைத்துறையினர் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கோலிவுட் இயக்குனரான அட்லீ, முதல் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த ஜவான் திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் […]
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு நாள்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் சென்னையில் […]
பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்தார் எடப்பாடி பழனிசாமி! முக்கிய பின்னணி!

மறைந்த தலைவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அண்ணாமலையை பா.ஜ.க. கண்டிக்கத் தவறியதை கண்டித்து பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியாக இணைந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தர்தல்களை சந்தித்தன. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமரியாதையாக பொது வெளியில் பேசியுள்ளார். இது குறித்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு […]
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

உடல் உறுப்பு தானம் செய்த தேனியைச் சேர்ந்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது. சாலை விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச்சாவு ஏற்படுபவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை சமீப காலமாக தானமாக அளித்து வருகின்றனர். அதன்படி உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது உடல்உறுப்பு தானம் செய்பவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் […]
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்று பெற்றுள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, […]
பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]
கர்நாடகத்திற்கு நாளை லாரிகளை இயக்காதீர்கள்! சம்மேளன தலைவர் எச்சரிக்கை!

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் திடீரென்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான எதிர் கருத்துகள் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்குள்ளாக 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசும், கர்நாடக […]
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வீண் போகவில்லை! சிக்கினார் பிரிஜ் பூஷன்!

மல்யுத்த வீராங்கனைளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரிஜ்பூஷன். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்ட பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது போலீசார் […]
ஆசியப் போட்டி! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 […]
260 ஆண்டுகள் ஆகிவிட்டது! எக்ஸ் பக்கத்தை தெறிக்கவிடும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில்!

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடந்த செப்.23ம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வசந்த கால தொடக்க நாளில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த நாளில் பகல் மற்றும் இரவு வேளைகள் சமகால அளவில் இருக்கும். ஆண்டில் […]

