News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இணையத்தை கலக்கும் லியோ போஸ்டர்! உங்களுக்கான ட்விஸ்ட்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இதன் ஆடியோ லாஞ்ச் வருகிற செப்டம்பர் 30ம் தேதி 8 ஆயிரம் பேர் அமரக் கூடிய […]

எழும்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! களை கட்டிய ரோஜ்கர் மேளா!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பணிகளில் தேர்வு பெற்றவர்களிடம் கலந்துரையாடினார். நாடு முழுவதும் அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் மொத்தம் 51 ஆயிரம் பேர் 9வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி வாயிலாக அரசுப் பணியை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று (செப்.26) வழங்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக […]

ரஜினிகாந்த் -ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

சந்திரமுகி-2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நாளை மறுநாள் (செப்.28) சந்திரமுகி-2 வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது பி.வாசுவின் 65வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் […]

திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் தொல்.திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.   மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகள் […]

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! முக்கிய அறிவிப்பு என்னவென்று தெரியுமா?

5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, […]

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பின்னணி தகவல்கள்!!

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]

அ.தி.மு.க.& பா.ஜ.க. கூட்டணி முறிவு! அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் […]

சென்னை உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அமலாக்ககத்துறையினர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெரு மற்றும் விஜய் அப்பார்ட்மெண்டுகளில் உள்ள சில முக்கியஸ்தர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஓ.எம்.ஆர். […]

அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி.! என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி சலுகை அறிவித்துள்ளது. நாளை (செப்.27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதுடன் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட 24வது தினத்தையும் கொண்டாடுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘‘செப்டம்பர் 25 முதல் 27ம் தேதிவரையிலான 3 நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்பதிவு […]

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக அரசு பிறப்பித்துள்ள திடீர் உத்தரவின்படி 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் சமீப காலமாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்த அரசாணைகளையும் தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டு வருகிறார்.   இந்த உத்தரவின்படி அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.   பூஜா […]