News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பதற்றம் நிறைந்த மாநிலமாக ‘மணிப்பூர்’ அறிவிப்பு! ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. […]

அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்! எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம், திருச்சியில் சீனிவாசன், பெரம்பலூரில் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் சரவணன் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திண்டுக்கல் ஆகியவை பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புதிய வழக்கு! ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் […]

தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தருமை ஆதீனம்! முக்கிய பின்னணி!

தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தமிழக அரசுக்கு ஓதுவார்கள் நியமனம் குறித்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தில் யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்து ஓதுவார் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஓதுவார்கள் நியமனம் குறித்து தருமை ஆதீனம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! முக்கிய தகவல்கள்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் […]

திருப்பதிக்கு செல்கிறீர்களா? உடனே இதை கவனியுங்கள்!

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) அக்டோபர் 12ம் தேதிவரை ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தினந்தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ‘‘சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் […]

போக்குவரத்து போலீசாருக்கு பட்டன் கேமரா! கூடவே இன்னொரு வசதியும்!

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பியுடன் சேர்த்து சட்டையில் பட்டன் கேமராவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆந்திர, குஜராத், மேற்குவங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் 900 கிராம் எடை கொண்ட குளிர்விக்கும் தொப்பி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொப்பியை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரம் என்ற தனியார் […]

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50,000 பேருக்கு அரசுப் பணி! முதலமைச்சர் உறுதி!

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பணி ஆணைகளை வழங்கினார். பணி ஆணைகளை வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசின் […]

கொரோனாவை விட 7 மடங்கு வீரியம்! 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும்! எச்சரிக்கை பதிவு!

கொரோனா வைரசை விட 7 மடங்கு வீரியமிக்க ‘எக்ஸ்’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 70 லட்சம் பேரை பலி வாங்கியது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களின் உயிரை இழந்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அவதிப்பட்டனர். கொரோனா தொற்று ஓய்ந்து […]

கர்நாடக- தமிழக எல்லைகளில் பதற்றம்! செப்.29 முழு அடைப்பு போராட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு 2 ஆயிரம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி நேற்று (செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், […]