News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மேடையிலிருந்து குதித்து விஜய் ரசிகரை அடித்த சீமான்..? குடி போதையா..?

சீமான் கூட்டத்தில் தளபதி, தளபதி என்று விஜய் பெயரைக் கூறியவரை, மேடையில் இருந்து இறங்கிவந்து அடித்த சம்பவம் செம வைரலாகிவருகிறது. குடி போதையில் சீமான் இப்படி செய்திருப்பதாக விஜய் கட்சியினர் செய்தி பரப்பிவருகிறார்கள். சீமான் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் டிவிகே, டிவிகே என்று சிலர் கத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசியசீமான், ‘புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள், ஓரமாக போய் விளையாடுங்கள், குறுக்கே வராதீர்கள்’ என்று பேசியிருந்தார். […]

தேர்தலுக்குத் தயாராகும் பாஜக. முதல் விக்கெட் ஐ.பெரியசாமி… அடுத்தது நேரு..?

வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக வித்தியாசமான பாணியில் அணுக இருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லி பாணியில் முக்கியமான திமுக புள்ளிகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஜெயிலுக்குள் அனுப்பும் திட்டம் தயாராகிறது. அந்த வகையில் மூன்று முக்கியப் பிரமுகர்களை சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் முதல் நபராகச் சிக்கியிருக்கிறார் ஐ.பெரியசாமி. ஏற்கெனவே செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கிறார். அடுத்தபடியாக நேருவும் மாட்டுவார் என்று சொல்லப்படுகிறது. இப்போதுஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரியசாமி […]

ஆளுநர் ஆர்.என்.ரவி பார்ட்டியில் விஜய்..? பட்டமளிப்பு விழாவில் அவமானம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார். பின்னர் ஜீன் ஜோசப் கூறும்போது, “தமிழுக்கும், தமிழக […]

கஞ்சாவுக்கு அடுத்து நாட்டு வெடிகுண்டு…. எடப்பாடி கடுமையான குற்றச்சாட்டு

தமிழகத்தில் எங்கெங்கும் கஞ்சா, போதைப் பொருட்கள் கிடைக்கிறது. இதனால் நாடெங்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள் நடந்துவருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகிறார். இந்நிலையில் மாணவர்கள் கத்தி, அரிவாள் என்று வன்முறையில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், […]

வாழும் ஜெயலலிதாவா பிரேமலதா..? கப்சிப் அதிமுக

எங்களைத் தவிர வேறு யாரும் விஜயகாந்த் போட்டோவை, வீடியோவை பயன்படுத்தக்கூடாது. அப்படி விஜய்காந்த் படத்துடன் போஸ்டர், பேனர் இருந்தாலே உடனடியாக வழக்கு போடுவோம் என்று பிரேமலதா பேசியிருந்தார். அவரை ஜெயலலிதா போன்று சித்தரிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பிரேமலதா. இதையடுத்து அங்கேயும் பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த படம் […]

விஜய் அடுத்து நீதிபதியைக் கூப்பிடுவாரா..? பனையூர் சாணக்கியர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எல்லாம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கியிருக்கும் நிலையில், அந்த போராட்டத்தை புதிய டைப்பாக அணுகியிருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் சாணக்கியத்தனம் என்று அவரது ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அவரது நிர்வாகிகள், ‘’விஜய் நேரில் வர தயாராக இருந்தார். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் அதை விரும்பவில்லை. அதிக கூட்டம் கூடிவிடும், மழை வரும் என்றெல்லாம் சொல்லி தடுத்து விட்டனர். அதனாலே நேரில் சந்தித்தார்’’ என்று […]

ராகுல் போராட்டம் ஜெயிக்குமா..? தேர்தல் ஆணையம் அடாவடி

கடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வெற்றி அடைந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், “பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இது குறித்து பேசுபவர்கள், ‘’தேர்தல் ஆணைய அறிவிப்பு ஜனநாயக விரோதமும், இந்திய அரசியலமைப்பை மீறும் செயலும் ஆகும். அரசியலமைப்பு என்ன சொல்கிறது? பிரிவு 32 & 142: உச்ச நீதிமன்றத்திற்கு, எந்த அமைப்பிடமும் […]

ராமனை பைத்தியம் என்றாரா வைரமுத்து? பொங்கியெழும் பாஜக

கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில் ராமரை அவமரியாதை செய்துவிட்டார் என்று பாஜகவினர் உரக்க குரல் கொடுத்துவருகிறார்கள். வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள். இந்த கம்பன் கழக விழா குறித்து கவிஞர் வைரமுத்து, ‘’மறைந்து நின்று அம்பெய்து கொன்ற ராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை; அந்தப் பழியை உலகமும் மன்னிக்கத் தயாராக இல்லை ஆனால் கம்பன் ராமனைப் பழியிலிருந்து காப்பாற்றுகிறான் “தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் […]

திருமாவளவனுக்கு எடப்பாடி கதவடைப்பு…? எம்.ஜி.ஆருக்கு அவமரியாதை

எம்.ஜி.ஆரை உருவாக்கியது பிராமணர்கள், திராவிட இயக்கத்தில் பிராமணியத்தை நுழைத்தவர் எம்.ஜி.ஆர். என்று திருமாவளவன் பேசிய விவகாரம் படுவைரலாகி வருகிறது. இனி, அதிமுக கூட்டணியில் அவர் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைமை உருவாகியிருக்கிறது. அதேநேரம், பிராமணியமே அதிமுகவை உருவாக்கியது, காப்பாற்றியது என்று கூறும் நடிகை கஸ்தூரி, ‘’பொன்மனச்செம்மல் தமிழ்நாட்டின் ஒப்பற்ற நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனிய கும்பல்தான் என்று உரத்து கூறிய விசிக தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் சார்பாகவும் பார்ப்பனியம் சார்பாகவும் நன்றி’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம் […]

சசிகலா பாணியில் ஓரம் கட்டப்படும் ராமதாஸ்… பாஜக திருவிளையாடல்.?

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பஞ்சாயத்தில் பாமக பஞ்சராகிக் கிடக்கிறது. இந்நிலையில் அன்புமணி கூட்டயிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்காமல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் அன்புமணி. பாஜகவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பது போன்று அன்புமணியை கூட்டணியில் சேர்ப்பதற்கு வசதியாக ராமதாஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளார். சசிகலாவைப் போன்று ராமதாஸை ஓரம் கட்டும் முயற்சிகள் நடக்கின்றன. எல்லாம் பாஜக திருவிளையாடல் என்கிறார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை […]