News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பரிதவிக்கும் மாணவர்கள்! மும்பை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது?

மும்பை ஐ.ஐ.டி.யில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கென்று தனி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே படித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் […]

சட்டவிரோத விளம்பர பலகை விவகாரம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்!

சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் சாலையின் நடுவே இருந்த விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானார். அதே போல் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இதுபோன்ற துயரசம்பவங்களை சுட்டிக்காட்டி, விளம்பர பலகைகளை தடையை மீறி வைக்க அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா […]

சாலை விபத்து! தேசிய கால்பந்து வீரர் பலி!

அமிர்தசரசில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தேசிய கால்பந்து வீரர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அதிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த சர்தாஜ்சிங் தேசிய அளவிலான கால்பந்து வீரராக இருந்து வந்தார். இவர் தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சர்தாஜ்சிங், வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் ரொட்டிகளை விநியோகம் செய்வதற்காக புறப்பட்டார். அப்போது கல்சாயா பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி […]

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு! எங்கே தெரியுமா?

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு இன்ப அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.   மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இங்கு மகளிர் மத்தியில் நற்பெயரை பெறும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு மத்தியபிரேதச அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.   அதில் ஏற்கனவே இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு வி […]

அவதூறு வழக்கு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை!

எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் […]

ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா! வில்வித்தை ஆண்கள் பிரிவு சாதனை!

இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தன்னை எதிர்த்து விளையாடிய சீன தைபேயை விட இந்திய அணி 230க்கு 229 என்ற கணக்கில் அபார சாதனயை படைத்துள்ளது. இன்றைய போட்டியான ஸ்குவாஷ்  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக […]

வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,  வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]

பா.ஜ.க.வின் அடுத்த சறுக்கல்! பவன்கல்யாண் திடீர் விலகல்!

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்ட பவன் கல்யாண் தற்போது திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனசேனா கட்சியின் தலைவரான பவன்கல்யாணுக்கு ஆந்திராவில் தனி மவுசு உள்ளது. பிரபல நடிகரான பவன்கல்யாண் ஆந்திராவில் ஜனசேனா கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். இதற்கிடையில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, பவன் கல்யாண் நேரில் […]

ஆசிய விளையாட்டு போட்டி! ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிக் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி தற்போது 12வது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனையான 70 பதக்கங்களை முறியடித்து 83 பதக்கங்களுடன் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியான ஸ்குவாஷ்  கலப்பு இரட்டையர் […]

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்! தாமதமாக வந்த அண்ணாமலை!

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தாமதமாக வந்தார். இருப்பினும் அதற்கு முன்பாகவே பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கப்பட்டது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொளவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார். அண்ணாமலையின் அவதூறு பேச்சுகளே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் […]