இந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளதுஇந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 38.5 டன் அளவிலான மருந்துகள் பேரிடர் நிவாரண பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்திய விமானப் படைக்க சொந்தமான விமானம் மூலமாக அனுப்பியது இந்திய அரசு
‘நீட் கையெழுத்து இயக்கம்”தொடக்கம்!

கழக இளைஞரணிச் செயலாளர் , மற்றும் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளோம். எப்படி, கடந்த ஆகஸ்ட் 20 […]
தாயை கொலை செய்த மகன்! எதற்காக தெரியுமா?

ஸ்மார்ட் போன் வாங்க பணம் தர மறுத்த தாயை, சொந்த மகனே கொலை செய்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் என்ற 47 வயது பெண்மணிக்கு திருமணமாகாத ராம்நாத்குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கமலாபாய் தன்னுடைய மூத்த மகனான ராம்நாத் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தாய்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று ராம்நாத் தனது தம்பியான தீபக்கிற்கு போன் செய்துள்ளார். […]
ரூ.1,000 கோடி வசூலாகுமா? ‘லியோ’ தயாரிப்பாளர் சொல்வது என்ன?

லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். […]
நவ.1ல் கிராமசபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் மாதம் 1ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமசபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலகநீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களில் நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்படும் […]
ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! உற்சாகத்தில் விஞ்ஞானிகள்!

ககன்யான் திட்ட மாதிரி முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதே போன்ற முயற்சியை இதற்கு முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளை அந்நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் […]
கொளத்தூர் தொகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானம்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள திரு.வி.க. நகர் பகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்தார். ரூ.3 கோடி செலவில் திரு.வி.க.நகர், பல்லவன் சாலை பகுதியில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்தாட்ட மைதானம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இம்மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாஸ் போட்டு தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து ஜவகர் நகர் பகுதியில் […]
‘மிசா’வை நெஞ்சுரத்தோடு ஏற்றுக் கொண்டவர் கே.வேணு! முதலமைச்சர் புகழாரம்!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்.21) காலமானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், […]
முற்றும் மோதல்! 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா!

இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பிப் பெற்றுவிட்டதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய- கனடா நாட்டிற்கு இடையிலான மோதல் முற்றுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இந்தியா &கனடா நாட்டுக்கு இடையிலான நட்புறவு கேள்விக்குறியானது. அதனால் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவில் பணியாற்றி […]
உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை 2023 தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய (அக்.20) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு […]

