News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா!

நல்ல கதை இருந்தால் நான் நடிக்கத் தயார் என்று கனவுக்கன்னியான நடிகை ரம்பா தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை ரம்பா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட அனைத்து உச்ச நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக உலா வந்தார். இவர் தனது 20 வருட திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தவிர்க்க […]

தேசிய விருதுக்கு தயாராகும் ‘தங்கலான்’-நடிகர் விக்ரம் ஓபன் டாக்!

தங்கலான் திரைப்படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்பது நடிகர் விக்ரமின் கெட்டப்பை பார்த்தாலே தெரிகிறது என்கிறார்கள் படக்குழுவினர்.   இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.   கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் […]

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! எப்போது தெரியுமா?

வருகிற டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நாட்டப்பட்டது. இந்த பாலம் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மக்களுக்காக அதனை திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் […]

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்- அமைச்சர் பொன்முடி!

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.   நாளை (நவ.2) மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்ட வீரரும், மூத்த இடதுசாரித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சங்கரய்யா தனது படிப்பை நிறுத்திவிட்டு […]

தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இன்று மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட 67வது ஆண்டை கொண்டாடி வருகின்றன. ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தென் மாநிலங்களின் போராட்டங்கள் வலுத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்தது. இதைத்தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற […]

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வேண்டும்! முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

தீபாவளிக்கு மறுநாளான (நவ.13) திங்கட்கிழமையை பொதுவிடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   அரசு விடுமுறை தினம், ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் விடுமுறை போச்சே என்று அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரத்த கண்ணீர் வடிப்பார்கள்.   அந்த வகையில் இந்த ஆண்டு 2023ல் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பல பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துவிட்டது. தற்போது வருகிற 12ம் தேதி தீபாவளி […]

தீபாவளி பண்டிகை! பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகையின் போது […]

இலங்கை செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.   மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.   அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் […]

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பரங்கிமலை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த 2 வாரங்களாகவே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் ஒரு சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 53 […]

டி.டி.எப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியூபரான டி.டி.எப்.வாசன், கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும் போது முன்சக்கரத்தை தூக்கி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது வலதுகை முறிந்ததுடன் வாகனமும் சேதமடைந்தது. இது குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், டி.டி.எப்.வாசனை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் […]