News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திடீரென்று உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர்! ராஜஸ்தானில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுவதால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த குர்மீத் சிங் கூனர் உடல்நல குறைவு காரணமாக […]

நாட்டையே விற்றுவிடுவார்களா? சாலமன் பாப்பையா கேள்வி!

மதுரை ரெயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நாட்டையே விற்றுவிடுவார்களோ என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   மதுரை ரெயில்வே மைதானம் மற்றும் ரெயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த வாரம் கையெழுத்து இயக்கம் […]

தியாகி சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதை! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு  கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   சங்கரய்யாவின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த அனைத்து […]

பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம்! கைதானவர் டி.டி.எபு.வாசனின் விசிறி என தகவல்!

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்த மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யூடியூபர் டி.டி.எப். வாசனின் விசிறி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   திருச்சியில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அதிவேகமாக வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு கெத்து காட்டி திரிந்து வந்துள்ளனர். இது குறித்த பல முறை போலீசார் […]

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் பலி! அதிர்ச்சி தகவல்கள்!

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காட்டில் அறந்தாங்கி அருகில் மாரிமுத்து என்ற மாணவன் பெருங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாரிமுத்து வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாரிமுத்து நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிலும் கலந்து கொண்டுள்ளார். பள்ளி முடிந்த நிலையில் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்கான தனது புத்தகப்பையை எடுத்துக் கொண்டு பள்ளி […]

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்! பொது மக்கள் பீதி!

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் நேற்று (நவ.15) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் […]

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கம்யூனிஸ்ட்சி கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தகைசால் தமிழரான சங்கரய்யாவுக்கு வயது 102. நூற்றாண்டை கடந்த சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சளி, […]

இந்தியா- நியூசிலாந்து அணி இன்று மோதல்! மும்பைக்கு சென்ற ரஜினிகாந்த்!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. […]

இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை […]

தக்காளி விலை மீண்டும் உயரும் அபாயம்! பொது மக்கள் அதிர்ச்சி!

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் மீண்டும் தக்காளியின் விலை உச்சத்தை தொடும் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியிலேயே அழுகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என எதுவுமே மழைக்கு தாக்குபிடிக்காமல் போனதால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து தக்காளிக்கு […]