News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணாமலை தலைமையில் தனிக்கூட்டணி..? வெளுத்துக்கட்டும் டிடிவி தினகரன்.

பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் இப்போது திசை மாறத் தொடங்கியிருக்கிறார். தஞ்சையில் டிடிவி கொடுத்த பேட்டி எக்குத்தப்பாக அரசியல் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருப்பதை விட அண்ணாமலை தலைமையில் தனிக்கூட்டணிக்கு முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ’’கரூரில் நடந்தது விபத்து தான். ஆனால் இதற்கு தவெக தார்மீக பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும். இபிஎஸ் மட்டும் பதவி வெறியில் பேசுகிறார்.ஆட்சியாளர்கள் தான் காரணம் என பேசுகிறார். ஆடு […]

ஸ்டாலினுக்கு கை கொடுக்க சீமான் ரெடி..? பாஜக பிடியில் விஜய்

கரூர் நெரிசலை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விஜய் விழித்துவந்த நிலையில், அமித்ஷா நேரடியாகவே பேசியதாகவும், ‘இனி பாஜக பார்த்துக்கொள்ளும்’ என்று உறுதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்து ஹேமமாலினி தலைமையில் ஒரு டீம் களத்தில் இறங்கி, எல்லா தவறுகளுக்கும் ஸ்டாலினே காரணம் என்று குற்றம் சுமத்தியிருக்கிறது. இதையடுத்து விஜய் அரசியல் மூவ் எல்லாமே இனி பாஜகவே தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது. வரயிருக்கும் தேர்தலில் பாஜக கூட்டணியில் அல்லது அதிமுக கூட்டணியில் விஜய் சேரவேண்டிய கட்டாயத்தை […]

கரூர் நம்பிக்கை அஸ்ரா கார்க்… என்ன செய்யப்போகிறார்..?

ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் காலம் தொடங்கி அதிரடி என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ஐ.ஜி. அஸ்ரா கார்க். இவரது தலைமையில் கரூர் அசம்பாவித சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நீதிபதி செந்தில் குமார், கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளதாகவும் காட்டமாகக் கூறினார். […]

ஆதவ் அர்ஜூனாவும் இன்று கைது..? திகிலில் விஜய்

டெல்லி சென்ற ஆதவ் அர்ஜூனாவுக்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றக் கிளை கொடுத்த அதிரடி உத்தரவுகளை அடுத்து இன்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளை இரண்டுமே இன்றைக்கு தவெகவுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் எதிராக சாட்டையைச் சுழற்றியிருக்கின்றன. கரூருக்கு முன்பாக நாமக்கல்லில் பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் நாற்பதுக்கும் மேற்பட்டோர் […]

திமுகவுக்கு ஆதரவாக சீமான் படை… திடீரென மாறும் அரசியல் களம்

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன. விஜய்க்கு பாஜக உதவி செய்யும் நிலையில் திமுகவுக்கு சீமான் படை களம் இறங்கியிருக்கிறது. இதுவரை சின்ன சான்ஸ் கிடைத்தாலும் திமுகக்கு எதிராக கடும் விமர்சனத்தை நாம் தமிழர் டீம் முன் வைக்கும். அதிலும் குறிப்பாக சாட்டையும் இடும்பாவனம் கார்த்திக்கும் திமுகவை பிரித்து மேய்வார்கள். ஆனால், இப்போது இவர்கள்தான் விஜய் கட்சியினரை கடுமையாக விரட்டியடிக்கிறார்கள். இது குறித்து பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’திமுகவுடன் […]

விஜய் கூட்டத்தில் கத்திக்குத்து..? திமுகவை மிரட்டும் ஆதவ் அர்ஜூனா பயணம்

விஜய் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதே இத்தனை ரகளைகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கத்திக்குத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்குப் போயிருப்பது திமுகவை பாஜகவும் தவெகவும் ஒன்று சேர்ந்து மிரட்டுவதாகவே கருதப்படுகிறது. கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த பாஜகவால் அமைக்கப்பட்ட  ஹேமமாலினி தலைமையிலான எம்பிக்கள் குழு,  சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

விஜய்யை அபேஸ் செய்யும் பாஜக… பக்கா ஸ்கெட்ச்

கரூர் சம்பவம் நடந்தபிறகு விஜய் வெளியில் எங்கேயும் வரவே இல்லை. அவரது நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாகவும், பாஜக ஸ்கெட்ச் போட்ட வழியிலே விஜய் வீடியோ வெளியிட்டு திமுக அரசை குற்றம் சாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விஜய்யைக் காப்பாற்றவும் திமுகவை குறை கூறவும் நேரடியாகவே பாஜக களம் இறங்கிவிட்டது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவைப் போடுவதற்கு விஜய்க்கு மூன்று நாட்களாகியிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த துப்பில்லை. ஏனென்றால் அங்கே […]

அன்புமணி அழுகை, அன்பில்மகேஸ் அழுகை… முட்டி மோதுறாங்க

கரூர் நெரிசல் மரணங்களை வைத்து இப்போது அரசியல் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. சம்பவம் நடந்தவுடனே மருத்துவமனைக்கு ஆஜரான செந்தில்பாலாஜி மற்றும் அன்பில் மகேஸ் மீது பரபரப்பாக குற்றம் சுமத்தப்படுகிறது. செந்தில்பாலாஜியே காரணம் என்று விஜய் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதிவைத்து தற்கொலையே செய்திருக்கிறார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், “கரூர் துயர சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும். மக்களை […]

ஃபெலிக்ஸை தூக்கிட்டாங்க… அடுத்தது ஆதவ் அர்ஜூனா..?

கரூர் நெரிசல் மரணங்களில் புதுப்புது வகையில் சந்தேகம் எழுப்பினார் டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்த ஃபிலிக்ஸ். அதாவது, 12 பேர் மேல கத்திய வெச்சி குத்தி கிழிச்சிருக்கானுங்க, – ஒரு அம்மா மேல வண்டி விழுந்துடுச்சு, அவங்கள காப்பாற்றாமல் மிதிச்சிருக்கானுங்க, – கழுத்தை மிதிச்சி கொலை பன்னிருக்கானுங்க என்றெல்லாம் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள், ‘’பேரணியின் போது செருப்புகள் மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது. டிவிகே தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களை […]

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் செத்தது எப்படி..? முழு மருத்துவ விளக்கம்

யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்இதுவரை 41 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புஉண்டு என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் நெரிசலில் எப்படி மரணம் நிகழ்கிறது என்பது குறித்துடாக்டர் சபரி தெளிவாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த நெரிசல் மரணம் குறித்து டாக்டர் சபரி, ‘’கூட்ட நெரிசலில்அலைமோதும் போது, இடமே இல்லாமல் ஒருத்தரோடு ஒருத்தர் மோதும் போது மூச்சுத்திணல் ஏற்பட்டுஉயிரிழக்கிறார்கள். இதைத்தான்  stampede என்று  ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள்.  •மூச்சுவிடும்போது நுரையீரல் சுருங்கி […]