சாட்டை துரைமுருகனை என்.ஐ.ஏ.வில் மாட்ட வைத்தது சீமானா..? குழப்பத்தில் தடுமாறும் தம்பிகள்

நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தி.மு.க.வினர் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள். அதாவது பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்கு நாடகம் போடுவதாக தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள். இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க.வை பா.ஜ.க.வின் பி.டீம் என்று பொதுக்கூட்டங்களில் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்கள். இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை சாட்டை துரைமுருகன் ஏறுக்குமாறாக பேசி வம்பிழுக்கிறார் என்பது தொடங்கி பல்வேறு விவகாரங்களில் நாம் தமிழர் சீமானுக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் கருத்துவேறுபாடு நிகழ்வதாக சொல்லப்பட்டு […]
கண்டா வரச்சொல்லுங்க என்று எடப்பாடியை கிண்டலடிக்கும் பன்னீர் டீம். பட்ஜெட் பரிதாபங்கள்

திருமண விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘’நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் பா.ஜ.க கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான ஒன்றிய பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு வெளியிடும். சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பா.ஜ.க-வும், நாங்களும் ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றோம். 16-ம் […]
சாட்டை வீட்டில் என்.ஐ.ஏ. ரெய்டு, இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன்… அண்ணாமலையுடன் சீமான் மோதியது காரணமா..?

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான தீவிரவாத இயக்கங்களிடமிருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன் […]
சாவர்க்கர் ஹீரோ.. இந்திராகாந்தி வில்லி – பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார சினிமாக்கள் ரெடி.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வெல்வதற்கு ஆளும் பா.ஜ.க. பல்வேறு கணக்குகளை போட்டுவருகிறது. ராமர் கோயிலை அடுத்து ஞானவாபி மசூதி விவகாரத்தையும் மதுரா கிருஷ்ணர் கோயிலையும் குறிவைத்து இயங்கிவருகிறது. அதோடு, சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டமும் அமலாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுக்க பா.ஜ.க.வின் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் வகையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, ரந்தீப் ஹூடா நடித்துள்ள “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்” படம். இதில் சாவர்க்கர் ஒரு […]
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஸ்டாலின், அரவிந்த் கெஜராலுக்கு விடப்படும் எச்சரிக்கையா?

அமலாக்கத் துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் கெத்து காட்டி வருகிறார் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல், பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிவருகிறார். இந்த இருவருக்கும் இடப்பட்டிருக்கும் எச்சரிக்கையே முதல்வர் ஹேமந்த் சோரன் கைது என்று அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28ம் […]
அடேங்கப்பா இத்தனை கோடியா..? எடப்பாடி பழனிசாமியை மிரளவைத்த ராமதாஸ் தேர்தல் பேரம்

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வில் இன்னமும் அதற்கான எந்த அசைவும் தென்படவில்லை. எப்படியாவது பா.ம.க.வை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்குகளை அள்ளிக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், பா.ம.க. போடும் பிளானே வேறு. இந்த தேர்தலில் அவர்களுக்கு தி.மு.க.வில் அழைப்பு இல்லை என்றாலும் அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் அழைப்பு இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் மோடியே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நிலக்கோட்டையில் தேவேந்திரகுல வேளாளர்கள் திடீர் போராட்டம்… அடுத்து கருப்புக்கொடி, தேர்தல் புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
5வது ஆம்புலன்ஸ் கொடுத்து மாஸ் காட்டிய நடிகர் பாலா… ஆனந்தக் கண்ணீரில் மலைக்கிராம மக்கள்

மிக்ஜாம் புயல் நேரத்தில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகர் பாலா. அதன்பிறகும் உதவி செய்வதை பாலா நிறுத்தவே இல்லை. சரியான சாலை வசதியும் வாகன வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து மக்களின் துயர் துடைத்து வருகிறார். அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மலைக்கிராமமான நெக்னா பற்றி […]
காரில் கஞ்சா கடத்திய கொடூர குற்றவாளிகள் 3 பேர் கைது. மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து வருகிறார்கள். மடிப்பாக்கம் எஸ்.7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது காரில் கஞ்சா கடத்திவந்த ரஞ்சன் கிஷோர் குமார், ஒத்தக்கண் அசோக், உதயகுமார் ஆகிய 3 பேரை […]
பாத்ரூமில் ரகசிய கேமரா… பிடிபட்ட வீட்டு உரிமையாளர்… வாடகை வீட்டுக்குப் போறவங்க உஷார்

சென்னையில் சொந்த வீடு இல்லாம வாடகைக்கு வீடு வீடா மாத்திட்டுப் போற மக்களே அதிகம் பேர் இருக்காங்க. அப்படி வாடகை வீட்டுக்குப் போன ஒரு பொண்ணுக்கு நடந்திருக்கிற கொடுமை ரொம்பவே அதிர வைக்குதுங்க. சென்னை ராயபுரத்துல ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்துட்டுப் போயிருக்காங்க. அந்த பொண்ணுக்கு பாத்ரூம் போய் குளிக்கிறப்ப ஏதோ ஒண்ணு தப்பா இருக்குதுன்னு தோணிக்கிட்டே இருந்திருக்கு. யாரோ நம்மள பார்க்கிறாங்கன்னு பொண்ணுங்களால ஈஸியா கண்டுபிடிச்சுட முடியும். அப்படித்தான் சந்தேகப்பட்டு பாத்ரூமை செக் பண்ணியிருக்காங்க. […]

