News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விக்கிரவாண்டிக்கு ஒன்பது அமைச்சர்கள்… விட்டுக்கு வீடு ஆயிரம் ரூபாய்?

மக்களவைத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தில் இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எந்தக் காரணம் கொண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சிறு சறுக்கலும் நடந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே உஷாராக இருக்கிறார். அதற்காகவே 9 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்திருக்கிறார். விக்கிரவாண்டியில் வன்னியர்களும் ஆதி திராவிடர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் களம் இறங்கக் காத்திருக்கின்றன. ஆளும் கட்சி மீதான அதிருப்தியை வைத்து எப்படியாவது தி.மு.க.வை சாய்த்துவிடத் துடிக்கிறார்கள். அப்படி […]

அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி. தமிழிசைக்கு களம் இறங்கும் நாடார்கள்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ, தமிழகம் முழுக்க பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலையைத் தவிர வேறு எந்த தலைவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில்லை. இதை மீறும் வகையில் தமிழிசை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அண்ணாமலையின் ஐடி விங் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தார். மேலும் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். 2026 தேர்தலிலும் […]

மோடி 3.0 அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா..? வைரலாகும் பட்டியல்

வாரிசு அரசியல் இந்தியாவில் தலை தூக்கவே முடியாது. வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவதே எங்கள் முக்கிய இலக்கு என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் வீரவசனம் பேசிய பிரதமர் நரேந்திரமோடியில் 20 பேர் வாரிசு அரசியல் மூலம் இடம் பிடித்திருப்பது தேசிய அளவில் வைரல் ஆகியிருக்கிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூட, ‘எங்கப்பா பேரு கருணாநிதி இல்லீங்க’ என்று கிண்டல் செய்தார். வாரிசு அரசியல் பேசிக்கொண்டே வாரிசை வளர்க்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. […]

செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து? ராகுலிடம் தி.மு.க. புகார்

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலிமையாக இருப்பதாலே தொடர் வெற்றி பெற்று வருகிறது. இந்த கூட்டணியை உடைக்கும் வகையில் செல்வப்பெருந்தகையின் பேச்சு இருப்பதாக தி.மு.க.வினர் கோபம் காட்டுகிறார்கள். செல்வப்பெருந்தகையை தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்று புகார் அனுப்புவதாக சொல்லப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். தொடர்ந்து கூட்டணியில் இருந்தால் நமக்கான இலக்கை அடைய முடியாது’ என்று செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கு அந்த கூட்டத்திலேயே இ.வி.கே.எஸ். […]

மீண்டும் களம் இறங்கும் செளமியா அன்புமணி… விக்கிரவாண்டி திருப்பம்

தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட செளமியா அன்புமணி தோல்வி அடைந்துவிட்டார். அந்த தோல்வி அனுதாபத்தை வெற்றியாக மாற்றுவதற்கு ராமதாஸும் அன்புமணியும் அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே 2016ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த சமயத்தில் அன்புமணி இங்கே நின்று தோற்றுப் போயிருக்கிறார். இங்கு பா.ம.க.வுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகள் இருந்தாலும் அ.தி.மு.க.வுக்குத் தான் அதிகம் உள்ளது. ஆகவே செளமியாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தூது போக இருக்கிறார்களாம். இந்த இடைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி […]

டி.ஆர்.பாலு பதவிக்கு வேட்டு வைத்த கனிமொழி

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பான்மை பெற முடியவில்லை என்றாலும் மைனாரிட்டி ஆட்சியை மோடி அமைத்துவிட்டார். இந்த நிலையில் தி.மு.க.விற்கு நாடாளுமன்ற குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக டி.ஆர். பாலுக்குக் கிடைக்கும் தலைமைப் பொறுப்பு இந்த முறை கனிமொழி கைக்குப் போயிருக்கிறது. இதனால் டி.ஆர். பாலு தரப்பு அப்செட் ஆகியிருக்கிறது. ஸ்டாலின் அறிவிப்பு படி, மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் […]

மோடியின் அமைச்சரவையில் முஸ்லீமுக்கு இடமே இல்லை

முஸ்லீம்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள், இந்துக்களின் தாலியைப் பிடுங்கி அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்துவிடும் என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி. முஸ்லீம்கள் மீதான நரேந்திரமோடியின் கோபம் இன்னமும் தீரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது மந்திரி சபை அமைந்திருக்கிறது. ஆம், ஒரே ஒருவர் கூட முஸ்லீம் அமைச்சராக இல்லை. மூன்றாவது முறை அமைக்கப்பட்டுள்ள மோடியின் அமைச்சரவையில் உள்ள 71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் […]

இந்த மாதம் வெளியே வருகிறார் நடிகர் விஜய்… குஷியில் ரசிகர்கள்

அறிக்கை மூலமாக மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுவதற்காக வெளியே வருகிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, […]

தமிழகத்தின் சமூக நீதி. இதோ 40 எம்.பி.க்களின் ஜாதி பட்டியல்

கட்சி ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் எந்த சமூகத்திற்கு இருக்கின்றன என்பதைப் பார்த்தே நிறுத்தப்படுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி நாம் தமிழர் கட்சி வரையிலும் ஜாதி பார்த்தே நிறுத்துகிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் என்னென்ன ஜாதியினர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை வன்னியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அடுத்த இரண்டாவது இடங்களில் இருக்கிறார்கள். […]

எடப்பாடி பழனிசாமியுடன் இணையத் துடிக்கும் பன்னீர் டீம்

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி அடையவில்லை என்றாலும் அதிக சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறா. அதேநேரம், ஓ.பன்னீர், தினகரன் ஆகியோருக்கு உருப்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆகவே பன்னீர் அணியில் இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் வெளியேறி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகக் கூறினார்கள். ஏற்கெனவே இந்த அணியில் இருந்து வெளியேறிய கு.ப.கிருஷ்ணன் இவர்களுடன் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கி மெரினாவில் செய்தியாளர்களை […]