தயாராகுங்கள்! வெளியானது நீட் முதுநிலை தேர்வு தேதி!

ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலைத் தேர்வுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் ஆயத்தமாக உள்ளனர். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை குறித்தும் பல்வேறு தரப்புகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில் கடந்த மாதம் (ஜூன்)23ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக […]
விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள்! பிரேமலதா எச்சரிக்கை!

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு […]
விஷசாராய நிவாரணம் திருப்பி வாங்கப்படுகிறதா?

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண செய்தி கேட்ட உடனேயே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் என்று அறிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் பல சலுகைகளை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழந்வர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்களுக்கு எதன் அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே […]
விக்கிரவாண்டி தேர்தலுக்குத் தடை? பணம், டோக்கன் விளையாட்டு ஆரம்பம்.

வரும் 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், நேற்று முதல் தி.மு.க.வினர் பணம், டோக்கன், இலவசப் பொருட்கள் என்று அள்ளிக்கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதை காரணமாக வைத்து எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்துவருகிறார்கள். தி.முக.வின் 10 அமைச்சர்களும் முக்கியப் புள்ளிகளும் விக்கிரவாண்டியில் தங்கி தீவிர பரப்புரை செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு சென்று நோட்டீஸ் கொடுக்கும் சாக்கில் பணம், டோக்கன் கொடுக்கிறார்கள். திண்ணைப் பிரசாரம் செய்கிறார்கள். கடைசி நேரத்தில் இன்னமும் அதிக பணம் கொடுக்கப்படும் […]
அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார். எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை பா.ம.க. பயன்படுத்தி வாக்குகள் வாங்குவதற்கு முயற்சி செய்வதும் அதற்கு அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு கொடுத்திருக்கும் நிலையில், முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக, அண்ணாமலை வாயிலேயே வடை சுடுகிறார் என்று நேரடியாக அட்டாக் செய்திருப்பது பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது. கோவை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்தவே கட்சி நடத்துகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டிருந்தால் நான்காவது இடத்துக்குப் போயிருக்கும் என்று கூறியிருப்பது அவரது அறியாமையைக் […]
பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்திற்கான தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக ஆட்சியமைக்க பெரும் பங்கு வகித்தது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றிதான். இந்நிலையில் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் முறையாக டெல்லி […]
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: கைது செய்யப்பட்டவர்களின் பகீர் வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்துல விஷசாராயம் குடிச்ச 65 பேர் உயிரிழந்த நிலையில, 229 பேர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று படிப்படியாக வீடு திரும்பி வருகிறார்கள். இருப்பினும் இன்னும் 14 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய […]
இடைத்தேர்தல் ஹோட்டல் செலவுக்கு திரள்நிதி..? சீமான் வசூல் வேட்டை

நாம் தமிழர் சீமானும் அவருக்கு நெருக்கமான சிலரும் பாண்டிச்சேரி ஸ்டார் ஹோட்டலில் தங்கிவிட்டு இடைத்தேர்தல் பிரசாரம் செய்வது கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சீமான் திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல்ல ஜெயிக்கிறோமா, தோற்கிறோமாங்கிறது முக்கியமில்லை. போராடுவது தான் நமக்கு முக்கியம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம், மிகப்பெரிய மாநாடு நடத்தி பணத்தை செலவு செய்ய மாட்டோம் என்று ஆவேசமாக பேசும் சீமான் இடைத்தேர்தல் செலவுக்கு திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘’மற்ற […]
களை எடுக்கப்பட்ட கோவை, நெல்லை மேயர்கள் பின்னணி. அடுத்த டார்கெட் மதுரை..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெல்லை, கோவை தி.மு.க. மேயர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கி அதிரடி காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உட்கட்சி பூசல் கொடி கட்டிப் பறக்கும் மதுரை மேயரிடமும் விரைவில் ராஜினாமா கடிதம் வாங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. கோவை தி.மு.க.வுக்கு பொறுப்பாக செந்தில்பாலாஜி இருந்த காலத்தில், அவரது பரிந்துரையின் பேரில் மேயர் ஆனவர் கோவை மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். இவரிடம் ராஜினாமா வாங்கியதற்கு முக்கியக் காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் இவரது ஏரியாவில் […]
விக்கரவாண்டியில் வேட்டி, சேலை விநியோகம்! கொந்தளித்த அன்புமணி!

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி திடீரென்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அறிவிப்பின்படி வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக தேர்தலை சந்திக்கிறார். அ.தி.மு.க. தேர்தலை […]

