ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக ஜனாதிபதி முர்மு..? தள்ளிப்போகும் கவர்னர் மாற்றம்

துணைவேந்தர் நியமனம் மற்றும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது ஆகியவை தொடர்பாக தி.மு.க. வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடன்பிறப்புகள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம் தள்ளிப்போகிறது என்கிறார்கள். இந்த வாரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறார் என்று ஒரு பேச்சு உலவியது. புதிய கவர்னர் நியமனத்துக்கு டெல்லியில் ஆலோசனை நடப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் […]
யூத் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. நீதிமன்றத்தில் சிக்கல் மேல் சிக்கல்

முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்கு ஊட்டி போயிருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல் ஸ்டைலாக கட்டம் போட்ட சட்டை போட்டு ஊரை வலம் வந்தார். ஆனால் ஸ்டாலினை நிம்மதி இழக்கச் செய்யும் வகையில் நீதிமன்ற உத்தரவுகள் சிக்கலை உருவாக்குகின்றன. துப்புரவு வாகனங்கள் வாங்கியது தொடர்பாக சவுக்கு சங்கர் போட்ட வழக்கு, டாஸ்மாக் எப்ஐஆர்களை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு ஆளுநரின் அதிகாரங்களைப் பிடுங்கிய வழக்கு போன்றவைகளில் ஸ்டாலின் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த […]
அன்புமணிக்கு இது கூட தெரியாதா..? சண்டைக்குத் தயாராகும் திருமாவளவன்

பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, ‘’நான் மற்ற தலைவர்கள் போல நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். முதலில் படித்து வேலைக்கு போக வேண்டும். அதன் பிறகு கட்சிக்கு வர வேண்டும். எனது தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது’’ என்று நேரடியாக திருமாவளவன் மீது ஆவேசம் காட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கல் எடுத்து […]
நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்குமா? செல்வப்பெருந்தகைக்குச் சிக்கல்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் […]
பொள்ளாச்சி வீடியோ எங்கே ஸ்டாலின்..? அடித்து விளையாடும் அதிமுக

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து 1300 காணொளி தன்னிடம் உள்ளது என அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசி இருந்தார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகும் அவர் ஒரு வீடியோவையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை. அந்த வீடியோ எங்கே ஸ்டாலின் என்று அதிமுகவினர் நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்ததும் முதல்வர் ஸ்டாலின், ‘’பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க […]
கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் […]
இதுக்குத்தான் நடந்ததா ஆபரேஷன் சிந்தூர். பாஜகவின் ஓட்டு ஊர்வலம்

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்றதும் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாஜகவை பார்த்து பங்கமாக கலாய்த்திருக்கிறார். இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஊர் ஊரால் ஊர்வலம் செல்வதற்கு பா.ஜ.க. தயாராவது பக்கா தேர்தல் நாடகம் என்றே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ’’இந்தியா மீது ஏவப்படும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் […]
அரசு பள்ளி மாணவர்கள் என்றால் மட்டமா..? பா.ஜ.க.வுக்கு வாய்க்கொழுப்பு

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை […]
விஜய் சர்வே உண்மையா..? சகாயத்துக்கு துணை முதல்வர் பதவி..?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால், தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும் என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் அடிப்படையில் […]
எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் வாழ்த்துகள்… விஜய் வாழ்த்து சொல்வாரா..?

2026-ல் அரியணை ஏறப்போகும் நமக்கான தலைவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் 7.5% எனும் நாடுபோற்றும் உள்இடஒதுக்கீட்டால் சமநீதி காத்த “புரட்சித் தமிழர்” என்றெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பாராட்டுகளைக் குவித்துக்கொணு இருக்கிறார்கள். நேற்றைய தினமே பா.ஜக.வை சேர்ந்த அண்ணாமலை தொடங்கி நயினார் நாகேந்திரன் வரையிலும் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்கல். அதேநேரம், இன்னமும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து சொல்லவில்லை. விஜய் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இன்று சீமான், […]