Share via:
0
Shares

சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் இன்று மதியம் 1 மணி அளவில் புறப்பட்டது . புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வலது புறம் உள்ள என்ஜின் வெடித்து தீ பற்றியது.
அதனால் விமானம் 3ம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கியது .
அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்டுக்குள் கொண்டுவந்தனர் .
இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பனமுறையில் மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் தனியார் செய்தித்தாள் தெரிவித்தது.
இந்த தீ விபத்தால் விமான நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டன .
Tagged latest