News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதே இல்லை. பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடாத மாநிலங்களுக்குக் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது.

ஒவ்வொரு பட்ஜெட் வெளியான பிறகும், ‘நிதி ஒதுக்கவில்லை’ என்று கண்டனம் செய்வதற்குப் பதிலாக, பட்ஜெட்க்கு முன்பாகவே எங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு புதிய எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கிறார்.

அவரது கோரிக்கைகள் நியாயமானவையே. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று, ‘’நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 பட்ஜெட்டில் கடந்தமூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்ஜெட்டுக்கு முன்பாகவே தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கு பட்ஜெட்டில் பலன் இருக்குமா என்று பார்க்கலாம். இந்த நிலையில், ‘ஸ்டாலின் எழுப்பியிருக்கும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்’ என்று தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் இப்போதே எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link