News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது.

 

இதில் இரு தரப்பும் பேச்சு  வார்த்தையில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன .

 

இதை தொடர்ந்து  இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 ‘ட்ரோன்’கள் வீசப்பட்டதால், உக்ரைன் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

 

தலைநகர் கீவ் கொண்ட  முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது .

 

அதை தொடர்ந்து முக்கிய ஏரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து  ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .கடத்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்க்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய  தாக்குதல் , அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது.

 

இதில் 100க்கு மேற்பட்டோர் வானிலேயே அழிக்கப்பட்டன . மைகொலைவ் நகரில் இருவரும் , ஒடேசா பகுதியில் இருவரும் உயிரிழந்துள்ளனர் . இதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்மடைந்துள்ளனர்.

இதனால் ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை உக்ரைன் மீது நடந்தியத்தை  தொடர்ந்து , இரு தரப்பிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது  .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link