News

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

Follow Us

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆனால்,ஆளுர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள்; அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும்?

ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மசோதாவை நிறுத்தி வைக்கிறேன் என்ற முடிவை எடுத்துவிட்டு பிறகு அதை ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதற்கு பதில் சொன்னால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று கேட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார்கள்.

பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­கள் நிய­ம­னத் திருத்த மசோதா உட்­பட தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்றி அனுப்பி வைக்­கப்­ப­டும் மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் தரா­மல் முரண்டு பிடித்து வரு­கி­றார் ஆளு­நர் ரவி. 2020 –23 காலக்­கட்­டத்­தில் 14 மசோ­தாக்­கள் தமிழ்­நாடு அர­சால் ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அதில் 2 மசோ­தாக்­களை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி விட்டு, 12 மசோ­தாக்­களை மாநில அர­சுக்கே திருப்பி அனுப்பி விட்­டார் ஆளு­நர் ரவி. இந்த மசோ­தாக்­களை சட்­ட­மன்­றத்­தில் மீண்­டும் நிறை­வேற்றி மாநில அரசு சார்­பில் ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. இரண்­டா­வது முறை­யும் அனுப்­பி­னால் ஒப்­பு­தல் தர வேண்­டும். உடனே ஆளு­நர், அந்த 12 மசோ­தாக்­க­ளை­யும் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி விட்­டார். அங்கு கிடப்­பில் கிடக்­கி­றது. இது மாநில அரசை, பல்­க­லைக் கழ­கங்­களை முடக்­கும் செயல் ஆகும்.

இதற்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தமிழ்­நாடு அரசு மனு தாக்­கல் செய்­துள்­ளது. இந்த வழக்­கு­கள் நீதி­ப­தி­கள் ஜே.பி.பர்­தி­வாலா, ஆர்.மகா­தே­வன் அமர்வு முன் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்போது, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனுப்பி வைக்­கப்­ப­டும் மசோ­தாக்­கள் மீது எந்த முடி­வும் எடுக்­கா­மல் நிறுத்தி வைப்­ப­தற்­கான கார­ணம் என்ன? இரண்டு மசோ­தாக்­களை ஆளு­நர் ஏன் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பி­னார்? 10 மசோ­தாக்­கள் மீது முடிவு எடுக்க மறுத்­த­தற்­கான கார­ணம் என்ன? அரசு மறு­ப­டி­யும் மசோ­தாக்­களை நிறை­வேற்றி அனுப்­பும் போது மசோ­தாக்­களை ஆளு­ந­ரால் நிறுத்­தி­வைக்க முடி­யுமா? இவ்­வ­ளவு கால­மாக ஏன் மசோ­தாக்­கள் மீது முடி­வெ­டுக்­க­வில்லை? மசோ­தாக்­கள் மீது முடிவு எடுக்­கா­மல் ஆளு­நர் நிறுத்தி வைத்­தார் என்­றால் அது எந்த பிரி­வின் படி? அர­சி­யல் சாச­னம் 200 அல்­லா­மல் வேறு ஏதே­னும் விதி­முறை உள்­ளதா? என்று முதல் நாள் விசா­ர­ணை­யில் சர­மா­ரி­யாக கேள்வி எழுப்­பியிருந்தனர்.

அதோடு மசோ­தாக்­கள் மீது ஒப்­பு­தல் வழங்­கா­மல் நிறுத்­தி­வைத்­தால் அதற்­கான கார­ணத்தை மாநில அர­சுக்கு தெரி­விக்­கா­மல் இருந்­தால் மாநில அர­சுக்கு எப்­படி தெரி­யும்? மசோ­தாக்­கள் மீது முடிவு எது­வும் எடுக்­கா­மல் நிறுத்தி வைத்­தால் அடுத்து என்ன நட­வ­டிக்கை? மசோ­தாவை நிறுத்தி வைப்­பது குறித்து அர­சி­யல் சாச­னம் 200 ஆவது பிரிவு எதை­யும் கூற­வில்லை. அப்­ப­டி­யா­னால் அடுத்த நிலை என்ன? பல்­க­லைக்­க­ழக மசோதா ஒன்­றிய சட்­டத்­துக்கு எதி­ராக இருந்­தால் அடுத்த நட­வ­டிக்கை என்ன?

மாநில அரசு எப்­படி செயல்­ப­டும் என்று நினைக்­கி­றீர்­கள்? மசோ­தாக்­களை கிடப்­பில் போட்டு, மாநில அர­சுக்கு முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கக் கூடாது. மசோ­தாவை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பும்­போது குறிப்பு ஏதும் இல்­லா­மல் அனுப்­பு­வது ஏன்? நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வர், அவ­ரா­கவே ஆளு­ந­ரி­டம் கேட்டு தெரிந்து கொள்­வாரா? தமிழ்­நாடு அர­சின் மசோதா விவ­கா­ரத்­தில், குடி­ய­ர­சுத் தலை­வர் எப்­போது முடிவை அறி­விப்­பார்? இப்­படி சர­மா­ரி­யான கேள்­வி­களை எழுப்­பிய நீதி­ப­தி­கள், மசோ­தாவை நிரா­க­ரிக்க ஆளு­நர் கார­ணம் தெரி­விக்க வேண்­டும் என்று கண்­டிப்­பு­டன் தெரி­வித்­த­னர்.

இதையொட்டி இன்றும் உச்சநீதிமன்றம் கேள்வி மேல் கேட்டு வருகிறது. அதேநேரம், மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். தி.மு.க.வுக்கு நீதி கிடைக்குமா என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link